விஜய்சேதுபதி பட நடிகைக்கு கல்யாணமா? பட்டுசேலை கட்டி போஸ் தந்ததால் பரபரப்பு..
பிட்ஸா மற்றும் சேதுபதி ஆகிய படங்களில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்தவர் ரம்யா நம்பீஸன். மேலும் விமலுடன் இரண்டாவது படம் அருள்நிதியுடன் நாலு போலீஸும் நல்ல இருந்த ஊரும் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த ஆண்டில் ரம்யா நடித்த ஒரு படமும் திரைக்கு வரவில்லை. கடந்த ஆண்டு அவர் நடித்த நட்புன்னு என்னனு தெரியுமா என்ற படம் கடைசியாக வெளியானது. படங்கள் வராவிட்டாலும் இணைய தள பக்கம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார் ரம்யா.
திடீரென்று தனது டிவிட்டர் பக்கத்தில் கல்யாண பெண் போல் ஜரிகைப்வேய்ந்த பட்டுச் சேலை, நெற்றி சுட்டி அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதைப்பார்த்ததும் யாரிடமும் சொல்லாமல் ரம்யா திருமணம் செய்துகொள்கிறார் என்று கோலிவுட்டில் பேச்சு எழுந்தது. அதுபற்றி அவரிடம் டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் விசாரித்தனர்.
எங்களுக்கு தெரியமாலே கல்யாணம் பண்றீங்களா? உங்களுக்கு கல்யாண் ஆயிடுச்சா என்று அவரிடம் கேட்டனர். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரம்யா உடனடியாக பதில் அளித்தார்.
'என்ன கல்யாணம் ஆயிடுச்சாவா? எப்போ கல்யாணமா? இல்லவே இல்லை. எனக்கு கல்யாணமெல்லாம் ஆகவில்லை. பட்டுசேலை உடுத்திய புகைப்படம் ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் ' என்றார் ரம்யா நம்பீஸன்.
You'r reading விஜய்சேதுபதி பட நடிகைக்கு கல்யாணமா? பட்டுசேலை கட்டி போஸ் தந்ததால் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News