சித்திரம் பேசுதடி 2 நடிகையிடம் ஆட்டய போட்ட ஆசாமி.. பீர் ஆர்டரில் ஆன்லைன் சுருட்டல்..

by Chandru, Dec 23, 2019, 11:35 AM IST

ஆன்லைனில் யார் கேட்டாலும் பாஸ்வேர்ட் மற்றம் கார்டு நம்பர சொல்லாதீர்கள் என்று பக்கமாக வங்கி மோசடி குறித்கு மெசேஜ்கள் வருகிறது. ஆனாலும் ஒரு சிலர் ஏமாறத்தான் செய்கிறார்கள். சமீபத்தில் அப்படி ஏமாந்தவர்கள் படடியலில் இணைந்திருக்கிறார் சித்திரம் பேசுதடி 2ம் நடிகை பிரியா பானர்ஜி.

கூலான பீர் மதுபானம் ஆன்லைனில் ஆர்டர் செய்தார். சிறிது நேரத்தில் ஆசாமி ஒருவர், 'குளிர்பானம் ஆர்டர் செய்தது நீங்க தானே பணம் தரணும், டெபிட் கார்ட் விவரத்தை சொல்லுங்க' என்றுகேட்க அதை உண்மை என நம்பி டெபிட் எண்களை சொன்னார். சில நொடிகளில் வங்கி கணக்கிலிருந்து 22 ஆயிரம் ரூபாய் அபேஸ் ஆனது.

அதிர்ச்சியிலிருந்தவருக்கு மறுபடியும் போன் வந்தது. உங்கள் கணக்கிலிருந்து அதிகமாக பணம் எடுக்கப்பட்டுவிட்டது. அதை திருப்பி அனுப்புகிறோம் கூகுல் பே விவரத்தை சொல்லுங்க என்றார். அவரது பேச்சை நம்பி அந்த விவரத்தையும் சொன்னார். கண்மூடி கண் திறப்பதற்குள் அதிலிருந்தும் 12 ஆயிரம் காணாமல்போனது.

வேறு வழியில்லாமல் ஆன்லைன் மோசடி குறித்து போலீசில் புகார் செய்தார் பிரியா பானர்ஜி. இரண்டு மணி நேரத்தில் பணத்தை போலீசார் மீட்டனர்.

You'r reading சித்திரம் பேசுதடி 2 நடிகையிடம் ஆட்டய போட்ட ஆசாமி.. பீர் ஆர்டரில் ஆன்லைன் சுருட்டல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை