ரஜினிக்கு ஒரு கதை, சூர்யாவுக்கு ஒரு கதை.. கவுதம் மேனன் சொன்னது..
விஜய்யிடம் யோகான் அத்தியாயம் ஒன்று பட ஸ்கிரிப்ட்டை சொன்னார் இயக்குனர் கவுதம்மேனன். அப்படத்தில் விஜய் நடிக்கவில்லை. அதே கதையை ரஜினிக்கு சொல்லி கவுதம் மேனன் சம்மதம் வாங்கியதாக தகவல் வந்தது.
இதுகுறித்து கவுதம் மேனன் கூறும்போது, ' கபாலி படத்திற்கு முன்னதாக ரஜினியை சந்தித்து ஒரு கதை கூறினேன் அதன்பிறகு எந்த கதையும் அவரிடம் சொல்வில்லை.
ரஜினிக்காக ஒரு கதை வைத்திருக்கிறேன். வாய்ப்புகிடைத்தால் அவரிடம் அந்த கதையை கூறுவேன்.
மேலும் நடிகர் சூர்யாவிற்காக புதிய கதை ஒன்றை எழுதி வருகிறேன். பிடித்திருந்தால் அவரை வைத்து இயக்குவேன்' என குறிப்பிட்டார்.
You'r reading ரஜினிக்கு ஒரு கதை, சூர்யாவுக்கு ஒரு கதை.. கவுதம் மேனன் சொன்னது.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News