பொன்னியின் செல்வன் 5 பாகம் வாங்கிய திரிஷா.. சரித்திர நாவலை கரைத்து குடிக்கிறார்..

by Chandru, Jan 24, 2020, 20:55 PM IST

கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யாராய் ஆகியோருடன் நடிகை திரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பொன்னியின் செல்வன் கதையை மேலோட்டமாக கேட்ட திரிஷாவுக்கு அந்த நாவல் மீது ஈடுபாடு ஏற்பட்டது.

தான் நடிக்கும் கதாபாத்திரத்தின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை கல்கியின் எழுத்தின் மூலமே அறிந்துகொண்டும், நாவலின் முழுவடிவம் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து அதன்படி தனது கதாபாத்திரத் தில் நடிக்கவும் முடிவு செய்தார். நேராக புத்தக கடைக்கு சென்றவர் பொன்னியின் செல்வன் நாவலின் 5 பாகங்களையும் மொத்தமாக வாங்கி வீட்டுக்கு எடுத்து வந்தார்.

தற்போது நாவலை கரைத்துகுடிக்கத் தொடங்கியி ருக்கும் திரிஷாவுக்கு புத்தகத்தை படிக்க படிக்க ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போகிறதாம். திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு எப்படி யெல்லாம் நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை கண்ணாடி முன் நடித்து பழகுகிறாராம். மேலும் தான் வாங்கிய வந்த பொன்னியின் செல்வன் 5 பாக புத்தகங்களையும் அப்படியே புகைப்படம் எடுத்து இணைய தள பக்கத்தில் வெளியிட்டு தனது ஈடுபாட்டை மொத்தமாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் த்ரிஷா.

You'r reading பொன்னியின் செல்வன் 5 பாகம் வாங்கிய திரிஷா.. சரித்திர நாவலை கரைத்து குடிக்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை