சிவகுமார், கமலை மிஞ்சிய சல்மான்கான்.. செல்பி எடுத்தவரின் செல்போனை பறித்து சென்றார்..

by Chandru, Jan 29, 2020, 16:25 PM IST

நடிகர் சிவகுமார் கடந்த ஆண்டுகளில் தன்னிடம் அனுமதி கேட்காமல் செல்பி எடுக்க வந்த நபர்களின் செல்போன்களை தட்டி விட்டார். ஒன்றிரண்டு முறை இதுபோல் சிவகுமார் நடந்த கொண்ட நிலையில் அவரது செயலை நெட்டிஸ்ன்கள் பிரச்னையாக்கினர். இந்நிலையில் ஒரு நபரின் செல்போன் விழுந்து நொறுங்கியநிலையில் அவருக்கு புதிதாக செல்போன் வாங்கித் தந்தார் சிவகுமார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன் விமான நிலையத்தில் நடந்து வந்துக்கொண்டிருந்தபோது அவரை வழி மடக்கி ஒரு ரசிகர் செல்பி எடுக்க முயன்றார். ஆனால் அதற்குபோஸ் கொடுக்காமல் கமல் விலகி சென்றார். ஆனாலும் அந்த நபர் விடாப்பிடியாக கமலை துரத்தினர். இதனால் எரிச்சல் அடைந்த கமல் அந்த நபரை பார்த்து ' ஐ செட் நோ' என்ற சத்தமாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்தி நடிகர் சல்மான்கான் நேற்று ராதே இந்தி படத்தின் படப்பிடிப்புக்காக கோவா சென்றார். விமான நிலையத்தில் இவர் வந்தபோது ரசிகர் ஒருவர் அவர் அருகே சென்று செல்ஃபி எடுக்க முயன்றார்.

இதனால் கோபம் அடைந்த சல்மான் அந்த நபர் வைத்திருந்த செல்போனை பாய்ந்து பறித்துக்கொண்டு கையில் எடுத்து சென்றார். செல்போனை பறிகொடுத்தவரிடம் அவரிடம் திருப்பி வாங்க வந்தபோது உடன் வந்த பாதுகாவலர் அந்த நபரை தூரப்போகச் சொல்லி தள்ளிவிட்டார். சல்மானிடம் செல்போனை பறிகொடுத்தவர் கோவா விமான நிலைய ஊழியர் ஆவார்.

You'r reading சிவகுமார், கமலை மிஞ்சிய சல்மான்கான்.. செல்பி எடுத்தவரின் செல்போனை பறித்து சென்றார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை