வீட்டிலிருந்து படப்பிடிப்புக்கு விமானத்தில் செல்லும் ஹீரோ.. தடபுடல் ஏற்பாடுடன் அஜீத் பட ரீமேக் ஷூட்டிங்..

by Chandru, Feb 7, 2020, 18:34 PM IST

தமிழில் அஜீத்குமார் வழக்கறிஞராக நடித்த படம் 'நேர்கொண்டபார்வை'. இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் ரீமேக்காக உருவானது. இந்தியை போலவே தமிழில் இப்படம் வெற்றி பெற்றதையடுத்து தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. அஜீத்குமார் ஏற்று நடித்த வேடத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கிறார்.

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண் கடந்த 2018ம் ஆண்டு கடைசியாக அகன்யாதவாசி என்ற படத்தில் நடித்தார். கடந்த ஒரு வருடமாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். இதற்கிடையில் ஆந்திர அரசியலில் குதித்து பின்னடைவை சந்தித்தார்.

ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு பவன் கல்யாண் நடிக்க வருவதால் அப்படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் பவன் கல்யாணுக்கும் சிறப்பு வசதிகளை பட தயாரிப்பாளர் செய்து தந்திருக்கிறார். ரூ. 50 கோடி சம்பளம் தருவதுடன் அவரை தினமும் படப்பிடிப்பு தளத்துக்கு வீட்டிலிருந்து சிறப்பு விமானம் மூலம் வீட்டிலிருந்து அழைத்து வர ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

வீட்டிலிருந்து ஒரு நடிகரை படப்பிடிப்பு தளத்துக்கு சிறப்பு விமானம் மூலம் அழைத்து செல்வது தெலுங்கில் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத வாய்ப்பாம்.

You'r reading வீட்டிலிருந்து படப்பிடிப்புக்கு விமானத்தில் செல்லும் ஹீரோ.. தடபுடல் ஏற்பாடுடன் அஜீத் பட ரீமேக் ஷூட்டிங்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை