போலீஸ் பாதுகாப்புடன் திரவுபதி படச் சிறப்புக் காட்சி.. அரசியல் பிரமுகர்களுக்கு திரையீடு..
ஆணவக் கொலையைப் பின்னணியாக வைத்து உருவாகியுள்ள படம் திரவுபதி. இப்படம் இன்று வெளியாகி உள்ளது. ரிஷி ரிச்சர்ட், ஷீலா ஜோடியாக நடிக்க மோகன்.ஜி. இயக்கி உள்ளார்.
இப்படம் இரு சாதிகளுக்கு இடையான பிரச்சினை பற்றிய படமாக உருவாகியிருக்கிறது. ஆனால் எந்தெந்த சாதி பற்றியது என்பதை நேரடியாகச் சொல்ல வில்லை. இப்படம் வெளியானால் சாதி கலவரம் ஏற்படும், அதனை ரிலீஸ் செய்யத் தடை விதிக்க வேண்டும் என்று போலீசில் ஒரு தரப்பினர் புகார் அளித்தனர். ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட படத்தை நிறுத்த இயலாது என்று கூறப்பட்டது.
பட ரிலீஸுக்கு முதல் நாளான நேற்று மாலை சென்னை பிரசாத் லேப் ப்ரிவியூ தியேட்டரில் நிருபர்களுக்குச் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. பாதுகாப்பு கருதி போலஸ் காவல் போடப்பட்டது.
மேலும் பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் குடும்பத்தினருடன் சேர்ந்து திரௌபதி படத்தைத் திரையரங்குகளில் பார்த்து கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள்.
You'r reading போலீஸ் பாதுகாப்புடன் திரவுபதி படச் சிறப்புக் காட்சி.. அரசியல் பிரமுகர்களுக்கு திரையீடு.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News