ஜோர்டான் நாட்டு ஷுட்டிங்கை கைவிடும் ஹீரோ.. 2மாத காத்திருப்பு வீண்..
Prithviraj wrapup Aadujeevitham Schedule In Jordan
நடிகர் பிருத்விராஜ் தனது கனவு படமான ஆடுஜீவிதம் மலையாள படத்தை ஜோர்டான் நாட்டில் படப்பிடிப்பு நடத்தத் தனது குழுவினருடன் சென்றார். அங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஷுட்டிங் நடத்த முடியவில்லை. கடந்த 2 மாதமாகப் படக்குழுவினர் பெரும் அவதியில் சிக்கினர். உணவு தட்டுப்பாடு தங்கும் இடம் போன்றவை சரியாக அமையாமல் சிரமப்பட்டனர். இனியும் தங்கிப் படப்பிடிப்பு நடத்தப் படக்குழுவினர் பலர் விரும்பவில்லை.இந்நிலையில் படப்பிடிப்புக்கு பிருத்விராஜ் பேக்அப் சொல்லி இருக்கிறார்.இதையடுத்து படக்குழு சீக்கிரமே திரும்பி வரும் என்று தெரிகிறது.திட்டமிட்டபடி படப்பிடிப்பைப் முடிக்க முடியாமல் திரும்புவது படக் குழுவினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
You'r reading ஜோர்டான் நாட்டு ஷுட்டிங்கை கைவிடும் ஹீரோ.. 2மாத காத்திருப்பு வீண்.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News