கஸ்தூரி மற்றும் தயாரிப்பாளர் மீது வனிதா புகார்.... சூர்யா தேவியை காப்பாற்ற சட்ட நடவடிக்கை..

Actress Vanitha Complaint Against 4 others including kashthuri

by Chandru, Jul 23, 2020, 16:57 PM IST

நடிகை வனிதா, பீட்டர் பால் திருமணம் பற்றி விமர்சித்த நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், படத் தயாரிப்பாளர் ரவீந்திரன், சூரியா தேவி மாறி மாறி இணைய தளத்தில் குற்றம் சாட்டியதுடன் ஒருமையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். கஸ்தூரி, சூரியா தேவி, ரவீந்திரன் உள்ளிட்ட 4 பேர்கள் மீது வனிதா போலீசில் புகார் அளித்தார்.வனிதாவுக்கும் சூரியா தேவிக்கும் சமரச முயற்சிகளை போலீஸார் நடத்தினர் அதில் சமரசம் ஏற்படவில்லை.

இந்நிலையில் சூர்யா தேவியை போலீஸார் விசாரணைக்காக அழைத்து வந்து பின்னர் கைது செய்தனர். இதுகுறித்து நடிகை கஸ்தூரி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில். இப்போது தான் எழுந்தேன். என் மீது உள்பட நான்கு பேர் மீது போலீஸ் புகார் கொடுத்தாக செய்தி அறிந்தேன். என் மீதான புகார் காமெடி பற்றி பிறகு பார்த்துக் கொள்கிறேன். முதலில் கைது செய்யப்பட்டுள்ள சூர்யா தேவியை சட்டப்படி எப்படிக் காப்பாற்றுவது என்பதற்கான வேலையைத் தொடங்குகிறேன் எனக் கஸ்தூரி கூறியுள்ளார்.

You'r reading கஸ்தூரி மற்றும் தயாரிப்பாளர் மீது வனிதா புகார்.... சூர்யா தேவியை காப்பாற்ற சட்ட நடவடிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை