நடிகர் தற்கொலையில் காதல் நடிகை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.

Many Alligation against Reha Chakraborthi in Police Complaint,

by Chandru, Jul 29, 2020, 12:11 PM IST

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அதற்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. இது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காதலி ரியா சக்ரபோர்த்தி, பட தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 40 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. இந்நிலையில் சுஷாந்த் தற்கொலைக்கு காரணம் அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி தான் என்று சுஷாந்த்தின் தந்தை கே.கே.சிங் பாட்னா போலீஸில் புகார் அளித்திருக்கிறார். ரியா சக்ரபோர்த்தி தெலுங்கில் துனீகா துனீகா என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மேரே டாட் கி மாருதி, சோனாலி கேபில் போன்ற இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

ரியா மீது பாட்னா போலீசில் சுஷாந்த் தந்தை அளித்துள்ள புகாரில் பல திடுக்கிடும் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது: சுஷாந்த் நடிப்பை விட்டுவிட்டு கேரளாவில் உள்ள கூர்க்கிற்கு சென்று வாழ விரும்பினார். அதற்காக தன்னுடன் வருமாறு ரியாவை அழைத்திருக்கிறார். ஆனால் மும்பையில் இருந்து வர முடியாது என்று அவரிடம் ரியா கூறி இருக்கிறார்.சுஷாந்த் மும்பையில் தங்கி இருக்கமாட்டார் என்று எண்ணிய ரியா ​சுஷாந்தின் பணம், நகைகள், கிரெடிட் கார்டுகள், முக்கியமான ஆவணங்கள், லேப்டாப் மற்றும் மருத்துவ பதிவுகளையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். தன்னுடய மொபைல் போனிலிருந்து சுஷாந்த் நம்பரை டெலிட் செய்திருக்கிறார். ரியாவிடம் எல்லா ஆவணங்கள் இருப்பதாகவும் தனக்கு பைத்தியம் பிடித்ததாகவும், யாரும் எனக்கு வேலை கொடுக்க மாட்டார்கள் என்றும் ஊடகங்களுக்கு முன்பாக பேட்டி அளிக்க வேண்டும் என்று சுஷாந்த்தை மிரட்டியிருக்கிறார், இதனை சுஷாந்த் தனது சகோதரியிடம் கூறியிருக்கிறார்.

ரியாவைச் சந்திப்பதற்கு முன்பு, சுஷாந்த் எந்த மனநோயாலும் பாதிக்கப்படவில்லை. ரியாவை சந்தித்த பிறகு, சுஷாந்த் ஏன் மனநலம் பாதிக்கப்பட்டார் என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். சுஷாந்த் மனநோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டாலும் அது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. சிகிச்சையின் போது சுஷாந்த்தை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் ரியா. அங்கு அவருக்கு அதிக அளவுக்கு (ஓவர் டோஸ்) மாத்திரை கொடுத்திருக்கிறார். மற்றவர்களிடம் சுஷாந்திற்கு டெங்கு ஜூரம் ஏற்பட்டதாக கூறியிருக்கிறார். சுஷாந்த்தை புதிய படங்கள் எதிலும் கையெழுத்திடவிடவில்லை. ஒவ்வொரு முறை படங்கள் வரும் போதெல்லாம் தன்னை (ரியா) அந்த படத்தில் ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாங்கித் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார். சுஷாந்தின் நம்பிக்கையான மற்றும் பழைய ஊழியர்களை மாற்றிய ரியா அதற்குப் பதிலாக தனக்கு விசுவாசமான தெரிந்த நபர்களை சுஷாந்த்திடம் வேலைக்கு சேர்த்திருக்கிறார். இதன் முலம் சுஷாந்த்தின் நடவடிக்கைகளை கண்காணித்தார்.

குடும்பத்தினருடனும் மற்றும் உறவினர்களுடன் நெருக்கமான யாருடனும் சுஷாந்த் பேசக்கூடாது என்று ரியா தடுத்தார். மேலும் மொபைல் எண்ணை மாற்றும் படி செய்தார். பாட்னாவில் உள்ள தனது குடும்பத்தினரை சந்திக்க சுஷாந்த்தை ரியா அனுமதிக்கவில்லை.2019 ம் ஆண்டில், சுஷாந்த் தனது வங்கிக் கணக்கில் ரூ .17 கோடி வைத்திருந்தார், ஆனால் சில மாதங்களில் ரூ .15 கோடி அவருடன் இணைக்கப்படாத கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. அந்த பணத்தில் எவ்வளவு பணம் ரியா மற்றும் அவரது கூட்டாளிகளால் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு ரியா மீது புகார் கூறப்பட்டிருக்கிறது.

You'r reading நடிகர் தற்கொலையில் காதல் நடிகை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை