கங்கனா கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு.. நடிகை - சிவசேனா கட்சியினர் மோதல் முற்றுகிறது..

பாலிவுட் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் வாரிசு நடிகர்கள் அவரை அவமானப்படுத்தியது தான் காரணம் எனவும் வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக ஆளும் கட்சி முக்கிய பிரமுகரும் மும்பை போலீஸாரும் துணையாக இருக்கிறார்கள் என்றும் கங்கனா புகார் கூறினார். மேலும் பாலிவுட் பார்ட்டிகளில் போது மருந்து தரப்படுகிறது என்றும் கூறினார்.கங்கனாவுக்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறும்போது, மகாராஷ்டிராவையும், மும்பை போலீசையும் கங்கனா அவமானப்படுத்தி உள்ளார். பயம் இருந்தால் அவர் மும்பைக்குத் திரும்ப வரவேண்டாம் எனத் தெரிவித்தார்.

அதற்குச் சவால் விடுவதுபோல் பதில் அளித்த கங்கனா, மும்பைக்கு வரவேண்டாம் என்று பலரும் எச்சரிக்கிறார்கள், பயமுறுத்துகிறார்கள். வருகிற செப்டம்பர் 9-ந்தேதி (நாளை) மும்பை வருகிறேன் முடிந்தால் என்னைத் தடுங்கள் எனத் தெரிவித்தார்.இந்நிலையில் கங்கனா ரனாவத்துக்கு ஆபத்து இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அரியானா உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதையடுத்து கங்கனாவுக்கு ஒய் பிளஸ் செக்யுரிட்டியை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்திருக்கிறது. இமாச்சல பிரதேசம் மனாலியில் தற்போது கங்கனா தங்கி இருக்கிறார். அந்த வீட்டுக்கு போலீஸ் காவல் போடப்பட்டிருக்கிறது.

கங்கனாவை பாஜகவினார் பின்னால் இருந்து இயக்கி வருகின்றனர் என உத்தவ் தாகேரேவின் சிவசேனா கட்சியினர் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்யா தாக்ரேவை சுஷாந்த் தற்கொலை வழக்கில் கங்கனா மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசி வருவதால் கங்கனாவுக்கும் சிவசேனாவுக் கும் இது நேரடி மோதலாக மாறி இருக்கிறது.சில மாதங்களுக்கு முன் ஆதித்யா தாக்ரே பற்றி கேலி செய்து பேசிய கங்கனா திடீரென்று மும்பையை காலி செய்து விட்டு மனாலி சென்று தங்கினார். சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாக கங்கனா சில கருத்துக்களைக் கூறியதால் அவரை மும்பை போலீஸ் நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு கேட்டது. இதற்கிடையில் தான் மனாலிக்கு சென்று விட்டதாகவும் தேவையென்றால் அங்கு வந்து விசாரணை நடத்துங்கள் என்றும் கங்கனா கூறினார்.

கங்கனாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ள நிலையில் நாளை மும்பை வருவதாக கங்கனா தெரிவித்திருக்கிறார். இதனால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் மும்பையில் கங்கனா கட்டி இருக்கும் மணிகர்ணிகை பட நிறுவன கட்டிடத்தில் சட்டவிரோதமாகக் கட்டுமானம் கட்டப்பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி அந்த கட்டித்தின் முகப்பில் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறது. உரிய விளக்கம் தரப்படாத நிலையில் அல்லது அந்த கட்டுமானங்களுக்கு உரிய அனுமதி வாங்காத நிலையில் கட்டிடத்தை நகராட்சியினர் இடித்துத் தள்ளுவார்கள் என்று கூறப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :