3 நாட்களில் கொரோனா கட்டுப்பாடுடன் முடிந்த ஷுட்டிங்..

kabadathari Shooting Finished in 3 days

by Chandru, Sep 30, 2020, 13:27 PM IST

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமாத்துறை தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றான கபடதாரி படத்தின் முழு படப்பிடிப்பும் இன்று நிறைவடைந் துள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கொலைகாரன் படத் தை தொடர்ந்து ஜி. தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகும் படம் கபடதாரி. இவர் வெளியிடும் மற்றும் தயாரிக்கும் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவதால், கபடதாரி படத்திற்கும் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு முடிவடையாமல் இருந்தது.
தற்போது திரைப்பட படப்பிடிப்புக்கு அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்ததையடுத்து, கபடதாரி படத் தின் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டு, கடந்த 3 நாட்களில் சென்னைக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது.


அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றியும், 70-க்கும் குறைவான நபர்களை கொண்டும் இந்த மூன்று நாட்கள் படப்பிடிப்பையும் கபடதாரி படக்குழு நடத்தி முடித்துள்ளார்கள். இதில் கதாநாயகன் சிபிராஜ், ஜே.பி உள்ளிட்ட நடிகர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டது.
வரும் நவம்பர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள கபடதாரி குழுவினர், திரையரங்குகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியான உடன், திரையரங்குகளில் ரிலீஸ் செய்வது குறித்து அறிவிக்க உள்ளார்கள்.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியி ருக்கும் இப்படத்தின் கதை, திரைக் கதை, வசனத்தை ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த்ராவ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளார்கள்.


சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத் தை கிரேட்டிவ் எண்டர்டெயின் மெண்ட் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். சைமன் கே கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார்.

You'r reading 3 நாட்களில் கொரோனா கட்டுப்பாடுடன் முடிந்த ஷுட்டிங்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை