அண்ணாத்த படத்துக்கு பிறகு ரஜினி நடிக்கும் 169வது படம் முடிவு...! இளம் இயக்குனர் டைரக்டு செய்கிறார்

by Chandru, Oct 30, 2020, 17:42 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் மீனா, குஷ்பு. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.இப்படம் பெரும்பகுதி முடிந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தடைபட்டது. கொரோனா தளர்வில் மற்ற படங்களின் படப்பிடிப்பு நடந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பும் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் முற்றிலும் ஒழியாத நிலையில் படப்பிடிப்பை தள்ளிவைக்குமாறு ரஜினி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து ரஜினி இல்லாத காட்சிகளை மட்டும் படமாக்க இயக்குனர் முடிவு செய்தார். நயன்தாரா. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காட்சிகள் படமாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனாலும் ஒரு கட்டத்தில் அந்த திட்டமும் கைவிடப்பட்டது, ரஜினி இல்லாமல் மீண்டும் ஷூட்டிங் தொடங்க இயக்குனர் சிவா தயக்கம் காட்டியதே இதற்குக் காரணம். அநேகமாக டிசம்பர் மாதத்தில் படப் பிடிப்பு தொடங்கக் கூடும். இல்லாவிட்டால் பொங்கல் முடிந்துதான் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. படத்தைக் கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்க சம்மதித்திருந்தார். அதில் கமலும் இணைந்து நடிப்பதாக இருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்தார். முதலில் இதன் ஸ்கிரிப்ட்டை கேட்ட ரஜினி சில மாற்றங்கள் செய்ய கேட்டார். அதன்படி மாற்றப்பட்டது. அண்ணாத்த படத்தை அக்டோபரில் முடித்துவிட்டு நவம்பர் மாதம் முதல் கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு எல்லாவற்றையும் தலை கீழாக்கிவிட்டது. அண்ணாத்த படமே இன்னும் ஷூட்டிங் பாக்கி இருப்பதால் அது முடிந்த பின் இப்படத்தைத் தொடங்க இன்னும் அதிக காலம் பிடிக்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலே நடிக்க முடிவு செய்தார். ரஜினிக்குத் தயாரிக்கப்பட்ட அதே ஸ்கிரிப்ட் கமலுக்கு ஏற்ப மாற்றப்பட்டது.அதற்கான அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது கமல் 232 எனப் பெயரிடப்பட்ட இதன் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்க இருக்கிறது.

ரஜினிகாந்த் பற்றி நேற்று ஒரு வதந்தி பரவியது அவரது உடல்நிலை குறித்தான அந்த வதந்தியை ரஜினியும் தனது உடல்நிலை குறித்த வந்த தகவலில் உண்மை இருக்கிறது என்றார், 71 வயதாகும் தான் அரசியல் பிரவேசம் செய்வதும், இந்த கொரோனா காலத்தில் மக்களைச் சந்திப்பதும் கேள்விக்குறியான விஷயம் என்பதால் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று தடாலடியாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர் வீட்டு முன் இன்று கோஷமிட்டனர்.

அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்த் என்ன முடிவு அறிவிப்பார் என்பது தெரியாத நிலையில் அவர் தனது 169வது படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். இளம் இயக்குனர் ஒருவரின் கதையில் அவர் நடிக்க முடிவு செய்துள்ளார். அது குறித்த அறிவிப்பு விரைவிலோ அல்லது அவரது பிறந்த நாளன்றோ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading அண்ணாத்த படத்துக்கு பிறகு ரஜினி நடிக்கும் 169வது படம் முடிவு...! இளம் இயக்குனர் டைரக்டு செய்கிறார் Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை