என்ன ஆச்சு பொன்னியின் செல்வன்.. வெளிநாடு ஷூட்டிங் கெடுபிடியால் பரபரப்பு

by Chandru, Nov 3, 2020, 18:05 PM IST

மணிரத்னம் இயக்கும் கல்கியின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதலே திட்டமிடப்பட்டுத் தொடங்கப்பட்டது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.வடநாட்டு காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு நடந்த நிலையில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு வந்ததையடுத்து படப்பிடிப்பு தடைப்பட்டது.மீண்டும் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டிருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதமே படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதற்கிடையில் ஐஸ்வர்யாராய் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் மட்டுமல்லாது மாமனார் அமிதாப்பச்சன், கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா என அனைவருமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர்.

கொரோனாவலிருந்து மீண்ட அமிதாப்பச்சன் கோடீஸ்வர இந்தி ஷோவை நடத்தி வருகிறார். ஐஸ்வர்யாராய் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே தங்கி இருக்கிறார். அடுத்து வெளியில் வந்தால் மணிரத்ன படப்பிடிப்புக்கு வருவது என்ற முடிவிலிருக்கிறார்.பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு திட்டங்கள் ஒட்டு மொத்தமாக மாற்றப்பட்டது. நவம்பர் மாதம் படப்பிடிப்புக்குத் திட்டமிடப்பட்டது. வெளிநாடுகளில் தாய்லாந்து. இலங்கை போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதிக்காக காத்திருந்தனர். ஆனால் கடுமையான கட்டுப்பாடுகள் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழலை ஏற்படுத்தியது. ஏற்கனவே பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் படக்குழுவினர் இத்தாலியில் படப்பிடிப்பு நடத்தச் சென்றனர். ஆனால் அங்குச் செய்யப்பட்ட கெடுபிடிகள் படக் குழுவைப் படப் பிடிப்பு நடத்தப் போராட வைத்தது.

இதனால் அங்குப் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பியது. இதையெல்லாம் அறிந்து மணிரத்னம் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை இந்தியாவிலும் மற்றும் அரங்குகள் அமைத்தும் நடத்த முடிவு செய்துள்ளனர். இப்படம் இரண்டு பாகமாக வெளியாகவிருந்தாலும் ஒரே கட்டமாக இரண்டாம் பாகத்துக்கான காட்சிகளும் படமாக்கப்படுகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.ஏற்கனவே இந்நிறுவனம் கமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தைத் தயாரிக்கிறது. அதில் எதிர்பாராத விபத்து, படப்பிடிப்பு தடை., இயக்குனருடன் பிரச்சனை, பட்ஜெட் குறைப்பு விவகாரம் எனப் பல சிக்கலை நிறுவனம் சந்தித்து வருகிறது. அந்த பிரச்சனைகள் எதுவும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பைப் பாதிக்கக்கூடாது என்பதில் அக்கறையாக உள்ளனர்.

You'r reading என்ன ஆச்சு பொன்னியின் செல்வன்.. வெளிநாடு ஷூட்டிங் கெடுபிடியால் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை