தேனிலவு நடிகைக்கு ஷூட்டிங்கிற்கு அழைப்பு.. மூட்டை கட்டுகிறார்..

by Chandru, Nov 18, 2020, 16:17 PM IST

நடிகை காஜல் அகர்வால் தனது பாய்ஃப்ரண்ட் கவுதம் கிட்ச்லுவை கடந்த மாதம் திருமணம் செய்தார். ஆனால் எந்த நேரத்திலும் படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து தேனிலவு திட்டத்தை தள்ளி வைத்திருந்தார். கமலுடன் இந்தியன் 2 மற்றும் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படங்களில் காஜல் நடிக்கிறார். இரண்டு படப்பிடிப்புமே கொரோனா ஊரடங்கில் நின்றது. மீண்டும் தொடங்கப் படவில்லை.

இதையடுத்து காஜல் தனது தேனிலவு பயணத்தைத் திட்டமிட்டுக் கடந்த வாரம் மாலத்தீவு சென்றார். அங்குக் கணவர் கவுதம் கிட்ச்லுவுடன் ஜாலியாக சுற்றித் திரிந்தும், ஆழ்கடல் நீச்சலிலும் மூழ்கி நேரத்தை ஜாலியாக செலவழித்தார். அதற்கான படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்த வண்ணம் இருந்தார். இந்த படங்கள் காஜல் ரசிகர்களுக்கு பரவசத்தையும் ஆச்சரியத்தையும் கிளுகிளுப்பையும் ஊட்டின. இதற்கிடையில், தேனிலவு பயணத்தை முடிக்க முடிவு செய்திருக்கிறார் காஜல். அதற்குக் காரணம் அவருக்குப் படப்பிடிப்பில் பங்கேற்க அழைப்பு வந்திருப்பதுதான்.

காஜல் அகர்வாலும் விரைவில் பணிக்கு வர முடிவு செய்துள்ளார். வரும் டிசம்பர் 5 முதல் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்க உள்ளது அதில் காஜல் பங்கேற்கிறார்.சமீபத்தில் ஆச்சார்யா படப் பிடிப்பில் பங்கேற்க சிரஞ்சீவி புறப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாகக் கூறப்பட்டதால் படப்பிடிப்பை ரத்து செய்தார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதித்த போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது. ஏற்கனவே எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா என்று தவறான முடிவு காட்டப்பட்டதாம்.ஆச்சார்யா படப்பிடிப்பில் திருமணத்துக்கு பிறகு முதன் முறையாக காஜல் அகர்வால் கலந்து கொள்கிறார்.

You'r reading தேனிலவு நடிகைக்கு ஷூட்டிங்கிற்கு அழைப்பு.. மூட்டை கட்டுகிறார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை