இந்திய கடற்படைக்கு சல்யூட் செய்த சூப்பர் ஹீரோ..

1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது கராச்சி துறைமுகத்தில் ஆபரேஷன் ட்ரைடென்ட் தாக்குதல் நடத்தியதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. 1971 ஆம் ஆண்டில் இந்த நாளில், ஓசா-ஏ ஏவுகணை-படகுகளின் படைப்பிரிவு திருட்டுத்தனமாக கராச்சி துறைமுகத்தை அணுகியது இரண்டு பெட்டியா வகுப்பு போர் கப்பல்களுடன் படைகளில் சேர்ந்து, அவர்கள் நான்கு பாகிஸ்தான் கப்பல்களை மூழ்கடித்து கராச்சி துறைமுகத் தை முற்றுகையிட வழிகாட்டும் ஏவுகணைகளை ஏவினர்.

இந்திய கடற்படையின் வீரம் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்படுவதற்கும், 1971 இந்தோ-பாக் போரில் தியாகம் செய்த பணியாளர்களை நினைவில் கொள்வதற்கும், இந்தியாவில் கடற்படை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 அன்று கொண்டாடப்படுகிறது. 2020 இந்தியக் கடற்படை தினத்தின் கருப்பொருள் (Theme) “இந்தியக் கடற்படை போர் தயார், நம்பகமான மற்றும் ஒத்திசைவானது” என்பதாகும்.

கடற்படை தினத்தையொட்டி தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது இணைய தள பக்கத்தில் சல்யூட் செய்திருந்தார். கடற் படை வீரர்களுக்கு அவர்களின் துணிச்சலுக்கும், தேசத்துக்கும் செய்த சேவைக்காக வணக்கம் தெரிவித்தார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் “ இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு நமது கடற்படை வீரர்களுக்கு வணக்கம்! உங்கள் அசைக்க முடியாத தைரியம் மற்றும் தேசத்திற்கான சேவைக்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும் ” என குறிப்பிட்டிருந்தார்.மகேஷ் பாபு தனது வரவிருக்கும் படமான சர்காரு வாரி பாட்டா படத்தின் படப்பிடிப்பில் விரைவில் இணைகிறார். கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பை அமெரிக்கா வில் தொடங்க திட்டமிட்டுள் ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். வங்கித் துறையில் நிதி மோசடிகளைச் சுற்றி இக்கதை அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதில் மகேஷ் பாபு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.நடிகர் மகேஷ்பாபு கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் அதில் சமூகத்துக்குத் தேவையான அம்சங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார். மகேஷ்பாபு நடிக்கும் சில தெலுங்கு படங்களின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடித்துள்ளார். கில்லி, போக்கிரி படங்கள் அதுபோல் உருவாகி வெற்றி பெற்றன. நட்பு ரீதியாகவும் விஜய் மகேஷ்பாபு அடிக்கடி நலம் விசாரித்துக் கொள்கின்றனர். கிரீன் இந்தியா சவால் மூலமாக மகேஷ்பாபு மரம் நடுவதற்கு விஜய்க்குச் சவால் விடுத்திருந்தார் அதையேற்று விஜய் மரம் நட்டு இருவருக்கும் உள்ள நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :