அலியாபட் ஷூட்டிங் அடுத்த வாரம் முடிக்க இயக்குனர் திட்டம்..

by Chandru, Dec 10, 2020, 14:48 PM IST

பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி படத்தில் நடிக்கப் பல நடிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். ரஜினிகாந்த்தும் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை ஒருமுறை வெளியிட்டார். எந்த நிபந்தனையும் விதிக்காமல் விஜய், சூர்யாவும் அவரது இயக்கத்தில் நடிக்க விருப்பமாக உள்ளனர். இந்நிலையில் அவர் தற்போது இயக்கி வரும் ஆர் ஆர் ஆர் படத்தில் நடிக்கும் பிரபல நடிகை ஒருவர் பல கண்டிஷன்கள் விதித்தார்.

ராஜமவுலி இயக்கும் படம் ஆர் ஆர் ஆர். ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு. கன்னடம் மலையாளம் இந்தி என் ஐந்து மொழிகளில் உருவாகிறது. ஐந்து மொழிகளில் பிரபல நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்தியில் படம் வெளியாவதால் அஜய் தேவ்கன், அலியா பட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தி நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலையின்போது சர்ச்சையில் சிக்கினார். அலியாபட். ஒரு பேட்டியின் போது சுஷாந்த் சிங் யார் என்பதே தெரியாது என்று சொல்லி அவரை கண்டு கொள்ளாதது போல் அலியா பட் சுஷாந்தை ஒதுக்கினார். இது வாரிசு நடிகைகளின் ஆணவப்போக்கு என்று சுஷாந்த் ரசிகர்கள் அலியா பட்டை வம்புக்கு இழுத்தனர். பின்னர் சுஷாந்த் இறந்தபிறகு இப்பிரச்சினை பெரிதாக வெடித்தது. அவருக்கு எதிராக ரசிகர்கள் கடும் கண்டனம் தெவித்தனர். அலியாபட் நடித்த இந்தி படமொன்று ஓடிடி தளத்தில் வெளியானபோது அதற்குக் கோடிக்கணக்கில் டிஸ்லைக்கை தெரிவித்து உலக அளவில் அதை ட்ரெண்டாக்கினார்கள்.

ஆர் ஆர் ஆர் படத்திலிருந்து அலியா பட்டை நீக்க வேண்டும் என்று ராஜமவுலிக்கு மெசேஜ் அனுப்பினார்கள். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. இந்நிலையில் நவம்பர் மாதம் முதல் அலியாபாட் ஆர் ஆர் ஆர் படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கி இருந்தார். ஆனால் டிசம்பர் மாதத்துக்குத் தள்ளிப்போனது. ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என் டி ஆர் முஸ்லிம் தொப்பி அணிந்ததற்கு பாஜ கட்சியினரும், ஆதிவாசிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அலியா பட் ஆர் ஆர் ஆர் படப்பிடிப்பில் பங்கேற்க கண்டிஷன்கள் விதித்தார். ஆர் ஆர் ஆர் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கப்படுகிறது. எனது காட்சிகள் விரைந்து படமாக்கி முடிக்க வேண்டும். அதற்கேற்ப காட்சிகள் படமாக்குவதை இயக்குனர் திட்டமிட வேண்டும். ஒதுக்கிய கால்ஷீட்டிற்கு மேல் கூடுதலாக நாட்கள் நடிக்க முடியாது. ஷூட்டிங் தவிரப் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என கண்டிஷன்கள் விதித்தார். அதனைப் படக் குழுவும் ஏற்றுக் கொண்டது.

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் படப் பிடிப்பு நடக்கிறது. அதில் பங்கேற்க சில நாட்களுக்கு முன் அலியாபட் ஐதராபாத் வந்தார். அவரை ராஜமவுலி வரவேற்றார். வந்த நாளிலிருந்தே அலியாபட் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.இதற்கிடையில் ஆர் ஆர் ஆர் படத்தில் அலியாபட்டுடன் நடிக்கும் ராம் சரண் தனது பெரியப்பா மகள் நிஹாரிகா திருமணத்தில் பங்கேற்க ராஜஸ்தான் சென்றிருந்தார். திருமணம் முடிந்தவுடன் அவர் ஐதராபாத் திரும்பி வந்தார். நாளை முதல் படப் பிடிப்பில் கலந்துகொள்கிறார். அலியாபட் அடுத்த வாரம் வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துவிட்டு மும்பை புறப்படுகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் அவர் திரும்பி வருகிறார்.

ஆர்.ஆர்.ஆர் என்பது தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த கோம ராம் பீம் மற்றும் அல்லூரி சீதா ராமராஜு ஆகிய இரு சுதந்திர வீரர்களிடையேயான நட்பின் கற்பனைக் கதை. என்.டி.ஆர் கோமரம் பீம் வேடத்திலும், ராம் சரண் அல்லூரி சீதா ராம ராஜு வேடத்திலும் நடிக்கிறார்கள். அலியா பட் சீதா என்ற வேடத்திலும் நடிக்கின்றனர்.

You'r reading அலியாபட் ஷூட்டிங் அடுத்த வாரம் முடிக்க இயக்குனர் திட்டம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை