வீட்டுக்கு செல்லாமல் ஸ்டார் ஓட்டலில் ஹீரோ முகாம்.. கொரோனா அச்சம்..

by Chandru, Dec 26, 2020, 10:31 AM IST

கொரோனா காலகட்டம் தொடர் கதையாகி இருக்கிறது. 8 மாத ஊரடங்கால் பொது வாழ்க்கை, திரையுலகம் கடுமையான பொருளாதார இழப்புக்குள்ளானது. அதிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் மீண்டும் கொரோனா பரவல் 2வது அலை வரும் என்றும் ஊரடங்கு வர வாய்ப்புள்ளது என்றும் தகவல் பரவி வருகிறது. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப் பிடிப்புகள் கடந்த 2 மாதமாக மீண்டும் தொடங்கி நடக்கிறது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஒரு சில படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப் பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதில் நடித்து வந்த ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். நேற்று ரஜினிகாந்த்துக்கு திடீரென்று ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பிறகு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ரஜினிகாந்த்துக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் விரைந்து குணம் அடையப் பலரும் மெசேஜ் பகிர்ந்தனர். ஐதராபாத்தில் நடிகர் யஷ் நடிக்கும் கே ஜி எஃப் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது. சில நாட்களுக்கு முன் படப் பிடிப்பு முடிவடைந்தது. இதில் யஷ், இந்தி நடிகர் சஞ்சய் தத் பங்கேற்று நடித்த சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. சஞ்சய்தத் ஏற்கனவே புற்று நோய்ப் பாதிப்புக்கான சிகிச்சை எடுத்து வந்தார். மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனபிறகு கே ஜி எஃப் படப் பிடிப்பில் பங்கு கொண்டார். அவரது உடல்நிலையைக் கருதி டூப் நடிகரைப் பயன்படுத்தி அவரது காட்சிகளைப் படமாக்க இயக்குனர் எண்ணியபோது தானே நடிப்பதாகக் கூறி முழு படப்பிடிப்பிலும் அவர் பங்கேற்று நடித்தார்.

கே ஜி எஃப் 2 படப்பிடிப்பு முடிந்து சஞ்சய்தத் மும்பை புறப்பட்டுச் சென்றார். ஹீரோ யஷ் பெங்களூர் திரும்பினார். ஆனால் அவர் நேராக வீட்டுக்குச் செல்லாமல் பைவ் ஸ்டார் ஒட்டல் ஒன்றில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஐதராபாத்தில் ஷூட்டிங் நடந்ததால் முன்னெச்சரிக்கையாக அவர் தனிமைப்படுத்தலில் உள்ளார். வீட்டில் அவரது மனைவி ராதிகா பண்டிட், குழந்தைகள் அய்ராம், யதர்வ் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தனிமைப்படுத்திக்கொள்ளும் முடிவை யஷ் எடுத்தார். 2 வாரத்துக்குப் பிறகு அவர் குடும்பத்தினரை சந்திக்க உள்ளார். கே ஜி எஃப் 2 படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். யஷ், சஞ்சய் தத்துடன், ரவீனா டாண்டன். பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

You'r reading வீட்டுக்கு செல்லாமல் ஸ்டார் ஓட்டலில் ஹீரோ முகாம்.. கொரோனா அச்சம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை