ஜாமீனில் வந்த நடிகை உடல்நிலை தேறியதா?

பெங்களுருவில் கடந்த ஆண்டு போதைபொருள் விற்கும் ஒரு கும்பலை போலீஸார் கைது செய்தனர். டிவி நடிகை ஒருவரும் நைஜீரியா ஆசாமியும் இதில் கைதானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி பெயரும் அடிபட்டது. இதையடுத்து போதை மருந்துதடுப்பு போலீசார் நடிகை ராகினி திவேதியை விசாரணைக்கு அழைத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அடுத்த சில நாளில் நடிகை சஞ்சனா கல்ராணியை விசாரணைக்கு அழைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பெங்களூர் பரப்பன அக்ஹாரா சிறையில் ராகினி, சஞ்சனா இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ராகினி புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் இரவில் நீண்ட நேரம் விளக்கு எரியவிட்டார். இது தனக்கு தொல்லையாக இருப்பதாகவும், தூக்கம் கெடுகிறது என்றும் சஞ்சனா தகராறு செய்தார்.

பிறகு இருவரும் தனித்தனியாக வேறு அறைகளில் உள்ள பெண் கைதியுடன் அடைக்கப்பட்டனர். கைதாகி சிறையிலிருந்த ராகினி தனக்கு ஜாமீன் வழங்கும்படி கீழ்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை. பிறகு அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். தான் நிரபராதி என்னை தவறாக கைது செய்திருக்கிறார்கள். எனவே ஜாமீன் தருமாறு கோரினார். இதுகுறித்து கீழ்கோர்ட்டிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது. இதற்கிடையில் சஞ்சனா கல்ராணி தனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு சிகிச்சை பெற வேண்டி தன்னை ஜாமீனில் விடுவிக்க கேட்டார். அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியதில் டாக்டர்கள் அவரது உடல்நிலையில் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து சஞ்சனாவுக்கு நிபந்தனை வழங்கப்பட்டது. 90 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு அவர் ஜாமீனில் வந்து வீட்டிலிருந்த படி சிகிச்சை பெற்று வருகிறார். சஞ்ஜனாவை நலம் விசாரித்து அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் மெசேஜ் அனுப்பி வருகின்றனர். தினமூம் மெசேஜ்கள் குவிந்த நிலையில் அவர் பதில் அளித்திருக்கிறார். அதில், தனிபட்ட முறையில் என்னிடம் இன்ஸ்டாமிரமில் ஏராளமானவர்கள் நலம் விசாரித்துள்ளனர். அதற்கு நன்றி. 1 மில்லியன் ரசிகர்கள் என்னை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளனர். உடல்நிலை சரியான பிறகு விரைவில் நான் சமூக வலைதள பக்கத்துக்கு வருவேன். என் குடும்பம், நண்பர்கள், இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கு நன்றி சொன்னால் மட்டும் போதாது என்று எண்ணுகிறேன் என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :