தேனிலவில் சில் சில் கூல் கூல்: படங்கள் பகிர்ந்த நடிகை..

by Chandru, Jan 4, 2021, 11:33 AM IST

விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல பார்த்து சொல்றேன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிஹாரிகா. இவர் சிரஞ்சீவி சகோதரர் நாகபாபுவின் மகள் ஆவார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கும் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரண்மனை நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடந்தது. நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர். நடிகர்கள் பவன் கல்யாண், ராம் சரண், வருண் தேஜ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். தடபுடலாக திருமண விழா ஒரு வாரம் நடந்தது.

இதில் நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் சிரஞ்சிவி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் பன்கேற்று நடனம் ஆடினார்கள். டிசம்பர் 9ம் தேதி நிஹாரிகா திருமணம் நடந்தது. பிறகு ஐதாராபாத் திரும்பினர். அங்கும் ஒரு திருமண வரவேற்பு நடைபெற்றது. உதய்பூர் செல்ல முடியாத உறவினர்கள், நண்பர்கள் ஐதராபாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதையடுத்து நிஹாரிகா, சைதன்யா கோயில்களுக்கு சென்றனர். பிறகு கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றனர். பின்னர் தேனிலவு பயணமாக நிஹாரிகா -சைதன்யா மாலத்தீவுக்கு சென்றனர்.

கடல் அருகே நின்று கணவருடன் சைதன்யா ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை நிஹாரிகா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, சைதன்யாவை கடலாக காண்கிறேன் என குறிப்பிட்டு மெசேஜ் பகிர்ந்தார். மற்றொரு தனி படத்தை நிஹாரிகா பகிர்ந்தார். இதை சைதன்யா படம் பிடித்திருந்தார். அதற்கு கேப்ஷன் கொடுத்த நிஹாரிகா வானமும் கடலும் சந்திக்கும் இடத்தில் என்னை சந்தியுங்கள் என தெரிவித்திருந்தார். நிஹாரிகா-சைதன்யா ஜோடி மாலத்தீவில் புத்தாண்டு கொண்டாடினர். புதுமண ஜோடிகள் தேனிலவு புறப்பட்ட சில நாட்களுக்கு பிறகு ராம் சரண், வருண் தேஜ் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You'r reading தேனிலவில் சில் சில் கூல் கூல்: படங்கள் பகிர்ந்த நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை