விஜய்யின் மாஸ்டர் இந்தியில் ரீமேக் ஆகிறது.. தமிழில் 3 நாளில் ரூ 50 கோடி வசூல்..

by Chandru, Jan 16, 2021, 10:11 AM IST

விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே திரைக்கு வருவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கால் திரையுலகம் முடங்கியது. 8 மாதமாக தியேட்டர்கள் மூடிக் கிடந்தன. தியேட்டர் அதிபர்களின் கோரிக்கைகளையடுத்து சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தியேட்டர்கள் 50 சதவீத டிக்கெட்டுடன் திறக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் மாஸ்டர் போன்ற பெரிய படங்கள் திரைக்கு வருவது நிறுத்தி வைக்கப்பட்டது. தியேட்டர்களில் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்குப் பிறகு படத்தை வெளியிட எண்ணினர்.

இதுகுறித்து தியேட்டர் அதிபர்கள், மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுத்தனர். அதைப் பரிசீலித்து 100 சதவீத டிக்கெட் அனுமதி வழங்கியது அரசு. ஆனால் அதற்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். டாக்டர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தது. 100 சதவீத டிக்கெட் அனுமதித்தால் கொரோனா வேகமாகப் பரவும் என்று அறிவுறுத்தியதுடன் அரசு 100 சதவீத முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்றனர். மத்திய அரசும் 100 சதவீத டிக்கெட் கூடாது கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் 100 சதவீத டிக்கெட் அனுமதியை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் இதுகுறித்து அரசிடம் கருத்துக் கேட்டது. பலமுனைகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் 100 சதவீத அனுமதி உத்தரவை ரத்து செய்த தமிழக அரசு 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி வழங்கியது. மாஸ்டர் படம் அறிவித்தபடி 13ம் தேதி அதிக தியேட்டர்களில் வெளியாகி வசூலை ஈட்டி வருவதுடன், ஹிட் படமாகவும் அமைந்துள்ளது. தியேட்டர் அதிபர்கள் எதிர்பார்த்தபடி மாஸ்டர் படம் ரசிகர்களை தியேட்டருக்கு திரள வைத்திருக்கிறது.

இந்நிலையில் விஜய் மாஸ்டர் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி எண்டெமால்ஷைன் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் ரீஜ் கூறுகையில், "மாஸ்டர் முழு செயல்திறன் மற்றும் சக்தி வாய்ந்த கதை ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை எதிரொலிக்கிறது.கொரோனா கால ஊரடங்கு தளர்வில் தமிழில் வெளியான முதல் பெரிய படம் “மாஸ்டர்” ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்தகைய சூடான படத்துக்கான உரிமைகளைப் பெற்றதில் நாங்கள் நம்பமுடியாத பெருமை அடைகிறோம்; இந்தி பார்வையாளர்களை ஈர்க்க இந்த படத்தின் ஈர்ப்பு மந்திரத்தை மீண்டும் உருவாக்க நாங்கள் எதிர் நோக்கி இருக்கிறோம், ”என்று ரீஜ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சினி 1 ஸ்டுடியோஸின் முராத் கெதானி, "இந்தி மொழியில் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்" என்று கெதானி கூறினார்.மாஸ்டர் படம் ஏற்கனவே தமிழ். தவிரத் தெலுங்கு, இந்தி படங்களிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனாலும் மீண்டும் இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தி முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர்.
தமிழில் வெளியான மாஸ்டர் 3 நாளில் 50 கோடி வசூல் செய்துள்ளது.

You'r reading விஜய்யின் மாஸ்டர் இந்தியில் ரீமேக் ஆகிறது.. தமிழில் 3 நாளில் ரூ 50 கோடி வசூல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை