பூஜாவுக்கு திடீர் பிரஷர் கொடுக்கும் இயக்குனர்.

by Chandru, Jan 17, 2021, 09:46 AM IST

தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த அல வைகுந்த புரமுலோ படம் சூப்பர் ஹிட்டானது. அல்லுவுடன் இணைந்து புட்ட பொம்மா படலுக்கு நடனம் ஆடியது பிரபலம் ஆனது. இதையடுத்து முன்னணி நடிகைகள் பட்டியலில் பூஜா இடம் பிடித்தார். பிரபாஸ் உடன் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்தது. கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்வில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இத்தாலியில் படப்பிடிப்பு நடத்த படக் குழு சென்றது. அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தாதால் படப்பிடிப்பு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. ஷூட்டிங்கை சொன்ன இடத்தில் எடுக்க வேண்டும் கூட்டம் சேர்க்கக்கூடாது, என பல விதிமுறைகள் அதிகாரிகள் விதித்து கெடுபிடி காட்டியதால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியாமல் சிரமப்பட்டனர். ஒரு வருடத்துக்கும் மேலாக இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஆனால் படப்பிடிப்பு முடிந்த பாடில்லை. இந்நிலையில் பிரபாஸுக்கு பட ரிலீஸும் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. பிரபாஸ் திடீரென்று 3 புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஓம் ராவுட் இயக்கும் ஆதிபுருஷ் படம் பிரமாண்டமாக தயாராக உள்ளது. ராமாயணத்தை தழுவி இப்படம் உருவாகிறது பிரபாஸ் ராமராக நடிக்கிறார். ராவணனாக இந்தி நடிகர் சயீப் அலிகான் நடிக்கிறார். மேலும் நாக் அஸ்வின் இயக்கும் படமொன்றிலும் நடிக்கிறார் பிரபாஸ். நாக் அஸ்வின் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடித்த சாவித்ரி வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் படத்தை இயக்கியவர். பிரபாஸுக்கு எல்லா படமும் டிராபிக் ஜாமில் சிக்கியது போல் ஷூட்டிங் தொடங்காமாலும், காலதாமாதமான ஷூட்டிங்குமாக பிரபாஸுக்கு அமைந்தது. இது அவரது ரசிகர்களை சோர்வடையச் செய்தது. இதனால் ரசிகர்களுக்கு ஒரு படத்தை விரைந்து அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். கே ஜி எஃப் 2 பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்திற்கு சலார் என பெயரிடப்பட்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. சமீபத்தில் இதன் தொடக்க விழா ஐதராபாத்தில் நடந்தது. படப்பிடிப்பும் தொடங்க உள்ளது. பிரபாஸ் நடிக்கும் மற்ற படங்களுக்கு முன் இப்படத்தை முதலில் வெளியிட இயக்குனர் திட்டமிட்டிருக்கிறார். இதனால் ராதே ஷ்யாம் பட இயக்குனர் ராதா கிருஷ்ண குமார் ஷாக் ஆனார். தனது படத்தின் ஷூட்டிங் இன்னும் பாக்கி இருக்கும் நிலையில் பிரபாஸ் வேறு படத்தில் நடிக்கச் சென்றுவிட்டால் தனது படப்பிடிப்பு பாதிக்கும் என்று எண்ணுகிறார். எனவே ராதே ஷ்யாமில் பாக்கி உள்ள காட்சிகளை வேகமாக படமாக்க முடிவு செய்திருக்கிறார். இதையடுத்து அவர் ஹீரோயின் பூஜா ஹெக்டேவுக்கு படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்க பிரஷர் கொடுத்து வருகிறார். அவரும் நிலைமையை புரிந்துக்கொண்டு மற்ற படங்களின் படப்பிடிப்பபை ஒத்திவைத்துவிட்டு வாரம் விட்டு வாரம் ஐதராபாத் வந்து இதன் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். இதனால் படக்குழுவும் பரபரப்பாக காட்சிகளை முடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

You'r reading பூஜாவுக்கு திடீர் பிரஷர் கொடுக்கும் இயக்குனர். Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை