லாக்டவுனுக்கு பிறகு வெளிநாட்டில் நடிகை ஜாலி.. கணவர் - நண்பர்களுடன் குதுகலம்..

by Chandru, Jan 21, 2021, 10:17 AM IST

கொரோனா கால லாக்டவுனில் படப்பிடிப்பு இல்லாமல் நடிகர், நடிகைகள் 6 மாதத்துக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். தினமும் ஒரு லொகேஷன், மாதம் ஒரு ஊர் என்று சுற்றி வந்த இந்த நட்சத்திரங்கள் கொரோனா லாக்டவுன் தளர்வில் விட்டால் போதும் என்று வெளிநாடுகளுக்கு ஜாலி ட்ரிப் சென்றார்கள்.கொரோனா லாக்டவுன் தளர்வில் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால் கணவர் கவுதம் கிட்ச்லுவுடன் தேனிலவுக்காக மாலத்தீவு சென்று சுமார் 1 மாதம் பொழுதைக் கழித்தார். காஜலை தொடர்ந்து வரிசையாக நடிகைகள் சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், வேதிகா, பிரணிதா ஆகியோரும் சென்றனர்.

ரஜினியுடன் லிங்கா படத்தில் ஜோடியாக நடித்த சோனாக்‌ஷி சின்ஹாவும் விடுமுறை பயணமாக மாலத்தீவு சென்றார். அங்கு நீச்சல் உடையில் நடிகைகள் தங்களது புகைப்படங்களை கிளாமராக வெளியிட்டு ரசிகர்களுக்குக் கவர்ச்சி விருந்து பகிர்ந்தனர். சோனாக்‌ஷியை அதிகமாகக் கவர்ச்சி உடையில் காண முடியாது ஆனால் அவரும் இம்முறை நீச்சல் உடை அணிந்த படங்களை வெளியிட்டு அசத்தினார். லாக்டவுன் ஏற்படுத்திய களைப்பை நடிகைகள் மாலத்தீவில் ரிலாக்ஸ் செய்துக் கொண்டனர். வாரம், மாதக் கணக்கில் நேரத்தைச் செலவிட்ட நடிகைகள் பிறகு படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்ததும் அங்கிருந்து புறப்பட்டு வந்தனர்.

லாக்டவுன் டென்ஷன் தவிர சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்தியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் போதை மருந்து வழக்கு தொடர்பான விசாரணையில் ரகுல் ப்ரீத் சிங் இழுத்துவிடப் பட்டார். இது அவரை மேலும் டென்ஷனாக்கியது. அதிலிருந்து விடுபட்டு மனதைத் தேற்ற குடும்பத்துடன் மாலத் தீவு சென்றார். காஜல் அகர்வால் மாலத் தீவிலிருந்து திரும்பி வந்த பிறகு சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படப்பிடிப்பிலும் நடிகை சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பிலும் ரகுல் ப்ரீத் அயலான் படப்பிடிப்பிலும் பங்கேற்று நடித்தனர். பல நடிகைகள் விடுமுறை மூடிலிருந்து பணிக்குத் திரும்பிய நிலையில் நடிகை நஸ்ரியா நாசிம் தற்போது கணவர் பஹத் பாசிலுடன் துபாய் புறப்பட்டார். லாக்டவுன் தளர்வுக்குப் பிறகு முதன்முறையாக இவர்கள் செல்லும் வெளிநாடு பயணம் இது. இவர்களுடன் குடும்பத்தினர், நண்பர்களும் சென்றிருக்கின்றனர். துபாயில் இவர்கள் விடுமுறையை அனுபவித்து வருகின்றனர்.

நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாய் ட்ரிப் பற்றிய ருசிகர தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். கதைகளைத் தனது கணவர் பஹத் மற்றும் நண்பர்களுடன் மிகவும் ஜாலியாக விளையாடி மகிழ்வதன் படங்களை பதிவிட்டிருக்கிறார். அதில் "என் துபாய் என்று கேப்ஷனிட்டு பகிர்ந்தார். நஸ்ரியா மற்றும் ஃபஹத் ஆகியோரை அவர்களது நண்பர்கள் கட்டிப்பிடிக்கும் மற்றொரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார்.மேலும் ருசியான மற்றும் ஆரோக்கியமான உணவை வெளுத்துக்கட்டும் படமும் வெளியிட்டார்.

You'r reading லாக்டவுனுக்கு பிறகு வெளிநாட்டில் நடிகை ஜாலி.. கணவர் - நண்பர்களுடன் குதுகலம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை