சித்ராவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் செய்ய சொன்ன ஹேமந்த்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..

by Logeswari, Jan 21, 2021, 10:44 AM IST

சின்னத்திரையில் ஒரு ராணியாக வாழ்ந்து கொண்டிருந்தவர் தான் விஜே சித்ரா. தனது சொந்த முயற்ச்சியால் தன்னைத்தானே மெழுகுதிட்டிக் கொண்டு யாரும் தொடக்கூட முடியாத உயரத்திற்கு வளர்ந்தவர். சித்ராவிற்கும் தொழில் அதிபரான ஹேமந்த் இருவருக்கும் நிச்சியதார்த்தம் முடிந்த நிலையில் பிப்ரவரி மாதம் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் தரப்பில் இருந்து அனைத்து வேலைகளையும் மும்மூரமாக செய்து வந்தார்கள். இந்நிலையில் சித்ரா டிசம்பர் 9 ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று ஊடகம் முழுவதும் செய்திகள் பரவி வந்தது.

சித்ரா இறக்கும் பொழுது அவரது காதல் கணவரான ஹேமந்த்தும் ரூமில் இருந்ததால் அவரிடம் போலீஸ் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சித்ராவின் மரணம் தற்கொலை என்று உறுதியானது. இதை தொடர்ந்து அவரது தற்கொலைக்கு காரணம் என்ற கோணத்தில் விசாரணை திரும்பியது. அத்துடன் ஹேமந்த்தும் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வர ஹேமந்த்தின் தந்தை மனு தாக்கல் செய்து இருந்தார். சித்ராவின் 10 வருட நண்பன் தீடிரென்று ஆஜராகி பல பகிர் தகவல்களை கூறியதால் வழக்கு சூடுபிடித்துள்ளது. அதாவது சித்ரா பல துன்பங்களை ஹேம்நாத் மூலம் அனுபவித்துள்ளார்.

சந்தேக புத்தியால் பல முறை சித்ராவை அடித்து சித்திரவதை செய்ததாக சித்ரா என்னிடம் பலமுறை அழுது வருத்தப்பட்டுள்ளார். ஒரு நாள் அவர்களது வீட்டின் கீழே ஒரு மருத்துவர் உள்ளார். ஹேம்நாத் அவரிடம் சென்று சித்ராவிற்கு விர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க வேண்டும். எப்படி எடுப்பது குறித்து விசாரித்துள்ளார். இதனை அந்த மருத்துவர் சித்ராவிடம் கூறியுள்ளார். சித்ரா என்னிடம் வந்து மற்றவர்களிடம் சென்று என்னை பற்றி இழிவாக பேசுகிறார் என்று மிகவும் வருந்தினார். சித்ரா அவரை திருமணம் செய்து கொண்டு எப்படியாவது திருத்தி விடலாம் என்ற மனநிலையில் தான் இருந்தார். ஆனால் அதுக்குள் என்னன்னவோ நடந்து விட்டது என்று அவரது நண்பர் கூறியுள்ளார்.

You'r reading சித்ராவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் செய்ய சொன்ன ஹேமந்த்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை