பிரதமர் வருகைக்கு பிரபல நடிகை எதிர்ப்பால் பரபரப்பு..

by Chandru, Feb 13, 2021, 20:18 PM IST

திரைப்பட நடிகைகள் ராதிகா, குஷ்பு, காயத்ரி, கவுதமி, வந்தனா, ஸ்ரீபிரியா, கோவை சரளா எனப் பல நடிகைகள் ஏதாவது ஒரு கட்சியில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்களில் ராதிகா தற்போதைக்கு அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தாலும், விரைவில் தனது கணவர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. இதற்காகச் சித்தி 2 சீரியலிலிருந்து சில வாரம் அவர் விடுப்பு எடுப்பார் என்று கூறப்படுகிறது.காங்கிரஸ் கட்சியில் அகில இந்தியச் செய்தி தொடர்பாளராக இருந்து வந்த குஷ்பு சில மாதங்களுக்கு முன் அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

நடிகைகள் கவுதமி, காயத்ரி போன்றவர்கள் பா.ஜவில் உள்ளனர். நடிகை வந்தனா அதிமுகவிற்காக பிரசாரம் செய்தார். தற்போது அவர் அதிகம் தலைகாட்டுவதில்லை. ஆனால் அரசியலில் இதுவரை சம்மந்தப்படாமலிருப்பவர் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற பிரபல நடிகை ஓவியா. அவர் திடீரென்று தனது இணைய தள டிவிட்டர் பக்கத்தில் அரசியல் அதிரடி கிளப்பி பலரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தி இருக்கிறார்.பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்.

இந்நிலையில் ஓவியா டிவிட்டர் பக்கத்தில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் பகிர்ந்திருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒவியா திடீரென்று இப்படியொரு ஹேஷ் டேக் போட்டிருப்பது அவர் அரசியலில் ஈடுபட மேற்கொண்டுள்ள முடிவா? அல்லது யாராவது அவரது டிவிட்டர் கணக்கை ஹேக் செய்து இப்படிப் போட்டிருக்கிறார்களா என்ற சலசலப்பு எழுந்துள்ளது. ஆனாலும் அவரது ரசிகர்கள் இந்த டிவிட்டை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். ஓவியா தற்போது தமிழில் ராஜபீமா, பிளாக் காஃபி, சம்பவம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

You'r reading பிரதமர் வருகைக்கு பிரபல நடிகை எதிர்ப்பால் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை