சிம்புவின் மாநாடு: புதிய அரசியல் செய்கிறார் வெங்கட் பிரபு
சிம்பு அவ்வப்போது அரசியலிலும் அரசியல் சார்ந்த சில முக்கிய விஷயங்களிலும் தலையிடுவார். அவ்வாறு அவர் தலையிட்டு பெரிய அளவிற்கு திருப்பம் ஏற்பட்ட விஷயங்கள் ஜல்லிக்கட்டு மற்றும் காவிரி பிரச்சனைகள்.
சிம்புவின் அடுத்த திரைப்படம் அரசியல் தலைப்பை சார்ந்ததாக அமைந்துள்ளது. வெங்கட் பிரபுவுடன் இணையும் சிம்பு பட தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார் என்ற அறிவிப்பு வெளியாகின. தற்போது அவர்கள் இணையும் படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு.
'வி ஹவுஸ்' சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. அரசியலை மையமாக வைத்து இந்த புதிய படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு.
மேலும் படத்தின் தலைப்பு ஒரு போஸ்டராக வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு. எஸ்.டீ.ஆரின் மாநாடு என்றும் எப்போதும் போல் வெங்கட் பிரபுவின் அரசியல் என்று சப் லைன் கொடுத்துள்ளார் இயக்குனர்.
படத்தின் நாயகிகள் யார் என்ற அறிவிப்பு மிக விரைவில் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற கலைஞர்கள் யாரெல்லாம் இணையுள்ளனர் என்றும் விரைவில் வெளியிடப்படும் என்றனர்.
You'r reading சிம்புவின் மாநாடு: புதிய அரசியல் செய்கிறார் வெங்கட் பிரபு Originally posted on The Subeditor Tamil
More Cinema News
READ MORE ABOUT :