மீண்டும் படமாகிறது இந்திய கிரிக்கெட் கேப்டனின் கதை: ஹீரோ யாரு தெரியுமா ?

Aug 13, 2018, 20:48 PM IST

வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, சமீபத்தில் வெளியான நடிகையர் திலகம் போன்ற பெயர் சொல்லும் விதமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் துல்கர் சல்மான். இவர் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் துல்கர் சமீபத்தில் வெளியான கர்வான் படத்தின் மூலம் இந்தி திரையுலகிலும் கால் பதித்துள்ளார். மேலும், இந்தியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்தியில் தேரே பின்லேடன், த ஷாகின்ஸ், பர்மனு போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அபிஷேக் சர்மா, தற்போது விராட் கோலி இந்திய அணியில் இடம்பிடித்தவுடன் நிகழ்த்திய சாதனைகள் மற்றும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை மையமாக கொண்டு படம் தயாரிக்க உள்ளார். இந்த கதையில், விராட் கோலி கதாபாத்திரத்தில் நடிகர் துல்கர் சல்மானை நடிக்க வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உலாவது.

மேலும் படத்தில் நடிகை சோனம் கபூர், நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவின் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு விரைவில் துவங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading மீண்டும் படமாகிறது இந்திய கிரிக்கெட் கேப்டனின் கதை: ஹீரோ யாரு தெரியுமா ? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை