சர்க்கார் திருட்டு கதையா? உதவி இயக்குனர் கதறல்
சர்க்கார் திருட்டு கதையா
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'சர்க்கார்'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2 ஆம்தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. படம் பற்றிய கருத்துக்கள் மக்களிடையே நல்வரவை பெற்று வரும் நிலையில் இதுமாதிரியான சர்ச்சை எழுந்துள்ளது.
உதவி இயக்குநர் வருண் அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், சர்க்கார் படத்தின் கதை தன்னுடையது என புகார் அளித்தார். "செங்கோல்" என்று பெயரிடப்பட்ட இக்கதையை 2007 ஆண்டு, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்ததாகவும், அதை திருடி ஏஆர்முருகதாஸ் அவர்கள் சர்க்கார் என்று பெயர் மாற்றி படத்தை எடுத்திருப்பதாகவும் தனது புகாரில் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து எழுத்தாளர் சங்கத்தில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளனர்.
You'r reading சர்க்கார் திருட்டு கதையா? உதவி இயக்குனர் கதறல் Originally posted on The Subeditor Tamil
More Cinema News