அணியில் கிடைக்காததால் தனியாக கடற்கரை சென்றேன்.. சூர்யகுமார் யாதவ் உருக்கம்!

by Sasitharan, Feb 23, 2021, 19:16 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம் பெறாத காரணத்தினால்தான் தனியாக கடற்கரை நடந்து சென்றதாக இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் உருக்கமாக தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்திய அணி நட்சத்திர வீரர்கள் இல்லாதபோதும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரலாற்று சாதனையை படைத்தது. இதற்கிடையே, கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஐபில் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 15 இன்னிங்சில் 480 ரன்களை இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் குவித்திருந்தார்.

ஆனாலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை. முன்னதாக, இது குறித்து சூர்யகுமார் யாதவ் கூறுகையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அணியில் இடம் பெறுவேன் என்று எண்ணியிருந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. ஐபிஎல் தொடர் மட்டுமின்றி உள்ளூர் கிர்கெட் போட்டிகளிலும் ரன்கள் எடுத்திருந்தால் எனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது. அணியில் தேர்வாகாதது எனக்கு விரக்தி தான் என்றும் மனம் திறந்து சூர்யகுமார் பேசியிருந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் இடம்பிடித்துள்ளார். இது தொடர்பாக ஸ்போர்ட்ஸ் டுடேவுக்கு பேட்டியளித்த சூர்யகுமார் யாதவ், நான் தேர்வாகாதபோது தனியே கடற்கரைக்கு நடந்தே சென்றேன். என் மனைவியிடம் இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு திரும்பிவிடுவேன் என்றேன். அப்போது ஐபிஎல்லில் இன்னும் சில போட்டிகள் மீதமிருந்தது. எப்படி விளையாடுவது, அணியை எப்படி வெற்றிப்பெற வைப்பது என யோசிப்பதற்காக சென்றேன். அப்போது என் மனைவியிடம் கொஞ்சம் நேரம் கொடுத்தால் திரும்ப வரும்போது என் முகத்தில் பெரிய புன்னகையை பார்க்கலாம் என கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

You'r reading அணியில் கிடைக்காததால் தனியாக கடற்கரை சென்றேன்.. சூர்யகுமார் யாதவ் உருக்கம்! Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை