கைதாகி 100 நாட்கள்.. ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா?

ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைதாகி 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றதாக குற்றம்சாட்டி, அமலாக்கத் துறையும் தனியே வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது. சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன்பின்னர், அவரது ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தன. இதன்பின், சுப்ரீம் கோர்ட்டில் அவருக்கு சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தது. ஆனால், அதற்கு முன்பாக அமலாக்கத் துறை வழக்கில் அவரை கைது செய்து விட்டனர். அதனால், அவர் தொடர்ந்து திகார் சிறையில் இருந்து வருகிறார்.

சிதம்பரம் கைதாகி நேற்றுடன்(நவ.28) 100 நாட்களாகி விட்டன. இந்நிலையில், அவரது ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. சமுதாயத்தில் முக்கிய அந்தஸ்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரை கேடிகள் பில்லா, ரங்காவை போல் நடத்துவது தவறானது என்று அவரது சார்பில் சீனியர் வக்கீல்கள் கபில்சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் வாதாடினர். மேலும், சிதம்பரத்திற்கு எதிராக எந்த ஒரு திடமான சாட்சியமும் இல்லாத நிலையிலும், அவரை பழிவாங்குவதற்காகவே சிறையில் அடைத்து வைத்துள்ளனர் என்றும் வாதாடினர்.

இதற்கு பதிலளித்து சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடும்போது, சட்டவிரோத பணபரிமாற்றம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது. சிதம்பரத்தின் ஏஜென்டுகள் மூலம் வெளிநாடுகளில் 12 வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 16 நாடுகளில் பினாமி பெயர்களில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. சிதம்பரம் மிகவும் செல்வாக்கானவர்.

அதனால் அவரை வெளியே விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார். அவருக்கு முன்பாக விசாரணைக்கு ஒத்துழைக்க 3 சாட்சிகள் மறுத்து விட்டனர். எனவே, அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என்று வாதாடினார். மேலும், சீலிட்ட கவரில் சிதம்பரம் தொடர்பான வங்கிக் கணக்குகள், வெளிநாட்டு சொத்துகள் பற்றிய விவரங்களை அமலாக்கத் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபன்னா, எச்.ராய் ஆகியோர் தீர்ப்பை தள்ளி வைத்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
farmers-delhi-chalo-protest-march-security-increased-at-haryana-delhi-border
விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம் தீவிரமானது.. எல்லைகளில் போலீஸ் குவிப்பு..
delhi-air-pollution
தீபாவளி பட்டாசுகளால் டெல்லியில் புகைமூட்டம்.. வாகன ஓட்டிகள் அவதி..
a-girl-raped-by-60-year-old-man
டெல்லியில் துணிகரம்.. 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்..!
biker-youtuber-with-nearly-million-followers-arrested-in-murder-case
காதலுக்கு எதிர்ப்பு காதலியின் அண்ணனை போட்டுத் தள்ளிய பைக் ஸ்டண்டர் கைது.
isis-recruitment-two-arrested-from-tamilnadu-and-karnataka
ஐ எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்கள் தேர்வு 2 பேர் கைது
6-year-old-girl-allegedly-raped-by-father-in-delhi
டெல்லியில் 6 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை நீதிமன்றத்தில் தாய் புகார்
youth-congress-burn-tractor-at-delhi-rajpath-raise-slogans
டெல்லி ராஜபாதையில் இளைஞர் காங்கிரசாரின் டிராக்டர் எரிப்பு போராட்டம்..
death-toll-rises-46-north-east-delhi-violence
டெல்லி கலவரத்தில் பலி 46 ஆக அதிகரிப்பு..
sonia-forms-a-team-to-visit-riot-hit-areas
டெல்லியில் கலவரம் நடந்த பகுதியில் மக்களைச் சந்திக்க காங்கிரஸ் கட்சி சார்பில் குழு..
congress-slams-political-interest-litigation
சோனியா மீது எப் ஐ ஆர் போடச் சொல்லுவதா? காங்கிரஸ் வழக்கறிஞர் கொதிப்பு
Tag Clouds