தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் 122 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது ராஜ்யசபாவில் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு, கேரளா உள்படத் தென் மாநிலங்களில் இதுவரை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் உள்துறை தெரிவித்துள்ளது.இந்தியாவிலும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் செயல்பட்டு வருவதாக ஏற்கனவே மத்திய உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையில் இந்தியாவில் பல பகுதிகளில் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் ரகசியமாகச் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் என்ஐஏ இறங்கியது. இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் மத்திய உள்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பது: இந்தியாவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர் செயல்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகக் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த அமைப்பினரின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

இது தொடர்பாக என்ஐஏ நடத்திய விசாரணையில் தமிழ்நாடு உள்படத் தென் மாநிலங்களிலிருந்து இதுவரை 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்மாநிலங்களில் கேரளாவில் தான் ஐஎஸ் இயக்கத்தின் செயல்பாடு அதிகளவில் உள்ளது. தென்மாநிலங்களில் மட்டுமில்லாமல் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் ஐஎஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :