கொரோனா பாதித்து இறந்தவர்கள் முகத்தை நெருங்கிய உறவினர்கள் பார்க்கலாம்... கேரளாவில் அனுமதி...!

கொரோனா நோய் பாதித்து இறந்தவர்களின் முகத்தைக் கூட கடைசியில் நம்மால் பார்க்க முடியாது. உடலிலிருந்து வைரஸ் உடனடியாக மற்றவருக்குப் பரவ வாய்ப்பிருப்பது தான் இதற்குக் காரணமாகும். கேரளாவில் கொரோனா பாதித்து இறந்தவர்களின் முகத்தை நெருங்கிய உறவினர்கள் மட்டும் பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா போல ஒரு மோசமான நோய் வேறு எதுவும் இருக்கமுடியாது. இந்த நோய் பாதித்து இறந்தால் அவரது உடலை நெருங்கிய உறவினர்களால் கூட பார்க்க முடியாது. உடலை பிளாஸ்டிக் கவர்களால் 3 அடுக்குகளில் சுற்றி 10 அடி ஆழத்தில் புதைக்க வேண்டும். இல்லாவிட்டால் வைரஸ் மிக எளிதில் பரவிவிடும். கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடல்களை எப்படி அடக்கம் செய்ய வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

இதன்படி தான் உலகம் முழுவதும் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. எந்தக் காரணம் கொண்டும் கொரோனா பாதித்து இறந்தவரின் உடலுக்கு அருகே செல்லக்கூடாது. உடலைத் தொடவோ, முத்தம் கொடுக்கவோ, கட்டிப்பிடிப்பதோ கூடாது.இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ஆட்கள் கலந்து கொள்ள முடியும். அதுவும் இடைவெளிவிட்டுப் பாதுகாப்பான முறையில் நிற்க வேண்டும். இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதித்து இறந்தவர்களின் முகத்தை மட்டும் நெருங்கிய உறவினர்களுக்குப் பார்க்க வசதி செய்யப்பட உள்ளது. இந்த தகவலைக் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், உலக சுகாதார அமைப்பின் நிபந்தனைகளின் படியே கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. இறந்தவர்களை நெருங்கிய உறவினர்கள் கூட பார்க்க முடியாத நிலை உள்ளது. அவர்களது வேதனையை போக்குவதற்காகக் கடைசியாக முகத்தை மட்டும் பார்த்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இறந்தவரின் முகத்திலுள்ள ஜிப்பை மட்டும் திறந்து காட்டப்படும். உடலுக்கு அருகே செல்லும் போது பாதுகாப்பு கவச உடை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :