சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மகரவிளக்கு காலம் 20ம் தேதியுடன் நிறைவடைகிறது. நாளை இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. மறுநாள் 31ம் தேதி முதல் மகர விளக்கு பூஜைகள் தொடங்கின. பிரசித்திபெற்ற மகர விளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்ப விக்கிரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம்.

இந்த திருவாபரணம் பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டது. 14ம் தேதி மாலை 6.30 மணியளவில் திருவாபரணம் ஐயப்ப விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த சமயத்தில் சபரிமலை பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி தெரிந்தது. இதை சபரிமலையில் திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்தனர். கொரோனா பரவல் காரணமாக இம்முறை சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வரும் 20ம் தேதி காலை 6.30 மணியளவில் சபரிமலை கோவில் நடை சாத்தப்படுகிறது. நாளை இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் இன்றுடன் நிறைவடைந்தது. 20ம் தேதி பக்தர்கள் யாரும் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. அன்றுடன் இவ்வருட மகரவிளக்கு காலம் நிறைவடையும். மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி மாதம் 12ம் தேதி நடை திறக்கப்படும். பிப்ரவரி 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை மாசி மாத பூஜைகள் நடைபெறும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :