பிளஸ் டூ மாணவி சரமாரி குத்திக் கொலை உறவினருக்கு வலைவீச்சு

கேரள மாநிலம் இடுக்கியில் பள்ளிக்குச் சென்ற பிளஸ்டூ மாணவி சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் ஒரு முட்புதரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது உறவினரான வாலிபர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.இடுக்கி மாவட்டம் பள்ளிவாசல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகள் ரேஷ்மா (17). அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தற்போது கேரளாவில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நேற்று ரேஷ்மா பள்ளிக்குச் சென்று இருந்தார். வழக்கமாக மாலை 4 மணிக்குள் அவர் வீடு திரும்பி விடுவார்.

ஆனால் நேற்று மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். பள்ளிக்குச் சென்று விசாரித்த போது அவர் வீட்டுக்குச் சென்று விட்டதாகக் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பள்ளிக்கு முன் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பரிசோதித்த போது மாணவி ரேஷ்மா ஒரு வாலிபருடன் நடந்து செல்வது தெரியவந்தது.

அந்த வாலிபர் யார் என போலீசார் விசாரித்தனர். இதில் அவர் ரேஷ்மாவின் தந்தை ராஜேஷின் உறவினர் அனுராஜ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அப்பகுதியில் உள்ள ஒரு நீரேற்று நிலையம் அருகே மாணவி ரேஷ்மாவை அனுராஜுடன் பார்த்ததாக அப்பகுதியினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் விசாரணை நடத்திய போது அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் முட்புதரில் கத்திக் குத்து காயங்களுடன் ரேஷ்மா பிணமாகக் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரேஷ்மாவை அனுராஜ் தான் கொன்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். பிளஸ் டூ மாணவி குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் இடுக்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :