சபரிமலை விவகாரம்: பாஜக தொடர் உண்ணாவிரதம்

Sabaraimala issue BJP Fasting against Kerala Government

by Devi Priya, Dec 4, 2018, 10:54 AM IST

சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளை கண்டித்து, பாஜக நேற்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளது.

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்தும், இதுகுறித்து கேரள அரசின் அணுகுமுறையையும் கண்டித்தும் பாஜக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியது.

திருவனந்தபுரத்தில், தலைமை செயலகம் எதிரில், பா.ஜனதா எம்.பி. சரோஜ் பாண்டே உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் இருந்து பா.ஜனதா பிரமுகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறார்கள்.

போராட்டத்தை வாழ்த்தி பேசிய பா.ஜனதா எம்.பி. பிரகலாத் ஜோஷி, ‘‘அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிரு‌ஷ்ணனை தடுத்த போலீஸ் அதிகாரி மீது நாடாளுமன்றத்தில் உரிமை பிரச்சினை கொண்டு வர வலியுறுத்துவோம்’’ என்று கூறினார்.

You'r reading சபரிமலை விவகாரம்: பாஜக தொடர் உண்ணாவிரதம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை