மக்களவையில் இன்றும் அமளி - மேலும் 3 அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட்!
3 AIADMK MPs suspend from Loksabha
மக்களவையில் இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட தமிழக எம்.பி.க்கள் நாடாளு மன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சபை நடவடிக்கைகள் தொடர்ந்து முடக்கப்பட்டதால் கடந்த புதன்கிழமை அதிமுக எம்.பி.க்கள் 25 பேரும், வியாழனன்று 7 பேரும் கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மக்களவையில் எஞ்சியுள்ள அதிமுக எம்.பி.க்களில் வேணுகோபால், செங்குட்டுவன், ராமச்சந்திரன் ஆகியோர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் எச்சரிக்கை விடுத்த பின் மூவரையும் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.
You'r reading மக்களவையில் இன்றும் அமளி - மேலும் 3 அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட்! Originally posted on The Subeditor Tamil
More India News