சும்மா வந்து விட்டுப் போகட்டுமே கொரோனாவை ஈசியாக நினைத்துவிட வேண்டாம்

கொரோனாவால் பாதிக்கப்படும் 20 சதவீதம் பேரில் அந்த நோயின் தாக்கம் 6 மாதங்கள் வரை இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.கொள்ளை நோயான கொரோனா உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகின்ற போதிலும் சிலர் அந்த நோய் குறித்து அதிகமாகக் கண்டு கொள்வதில்லை. இந்த நோயைத் தடுக்க முகக் கவசம், சோப், சானிடைசர், சமூக விலகல் என இவை அனைத்தும் கட்டாயம் என அரசு எச்சரித்து வருகின்ற போதிலும் அதைப் பற்றிக் கவலைப்படாதவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். 'சும்மா வந்து விட்டுப் போகட்டுமே' எனச் சிலர் கருதுகின்றனர். ஆனால் அவ்வளவு ஈசியாக கொரோனாவை நினைத்துவிட வேண்டாம் என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

இதுதொடர்பாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ள விவரத்தைப் பார்ப்போம்... கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேருக்கும் பெரிதாக ஏதும் பிரச்சனை ஏற்படுவதில்லை. அவர்களுக்கு நோய் அறிகுறிகள் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் குறைந்துவிடும். நோயின் பின் விளைவுகளும் அதிகமாக இருக்காது. ஆனால் 20 சதவீதம் பேருக்கு மாதக்கணக்கில் இந்த நோயின் அறிகுறிகளும், அதன் தாக்கமும் இருக்கலாம். அளவுக்கு அதிகமான களைப்பு இருக்கும். சில நாட்களில் நோய் முற்றிலுமாக குணமடைந்து விட்டது போலத் தோன்றும். ஆனால் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் மீண்டும் கடுமையான களைப்பு அவர்களைப் பாதிக்கும். பெண்களுக்குத் தான் தான் இந்த அறிகுறி அதிகமாக இருக்கும்.

இதுதவிர தலைவலி, இருமல், நெஞ்சு பாரம், வயிற்றுப்போக்கு, குரலில் மாற்றம் ஆகியவையும் இருக்கும். முதல் ஐந்து நாட்களில் கடுமையான இருமல், குரலில் மாற்றம், மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் காணப்படும். இதுபோன்ற அறிகுறிகள் இதய நோய் இருப்பவர்களுக்குக் காணப்பட்டால் அவர்களுக்கு அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும். மரணம் கூட ஏற்பட வாய்ப்புண்டு. 6 மாதங்கள் வரை இந்த கடுமையான பாதிப்பு இருக்க வாய்ப்பு உண்டு. எனவே கொரோனாவை அவ்வளவு எளிதாக யாரும் கருதி விடக்கூடாது என்று இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் தற்போதைக்கு முகக் கவசம், சமூக அகலம் ஆகியவை மிக முக்கியமாகும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?
Tag Clouds

READ MORE ABOUT :