நான் அடித்தால் நாக் அவுட் தான் தினகரனை எச்சரித்த அமைச்சர்!

Minister Jayakumar warned TTV Dinakaran

by Manjula, Oct 18, 2018, 20:36 PM IST

நான் மைக் குமார் அல்ல, மைக் டைசன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதால் செய்தியாளர் சந்திப்பு கலகலப்பானது.

எம்.ஜி.ஆர். நிறைவு நூற்றாண்டு விழாவில், அமைச்சர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆர். பாடல்களைப் பாடி அசத்தினார். பிரபல பின்னணி பாடகி பி.சுசிலா மேடைக்கு வந்து அமைச்சர் என்னுடன் பாட வேண்டும் என்று கேட்டார். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்ற பாடலைப் பாடினர். முன்னதாக பாடல் பாடும் முன்பு, தவறாக பாடினால் மன்னித்துக்கொள்ளவும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார். மேடையில் பாடிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு ரசிகர்கள் சார்பில் ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த தினகரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் ஜெயகுமார். சென்னை மூலக்கொத்தளத்தில் நடைபெற்ற அதிமுகவின் 47ஆவது தொடக்க விழா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் டிடிவி தினகரன் தன்னை மைக் குமார் என்று விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்தார்.

நான் மைக் குமார் அல்ல மைக் டைசன் என்று தெரிவித்த ஜெயக்குமார் ,அடித்தால் நாக் அவுட் தான் என்று கூறினார் மேலும் தனக்கு பாக்சிங் நன்றாக தெரியும் என்றும், வேண்டுமானால் வாருங்கள் மோதிப் பார்க்கலாம் என்று செய்தியாளர்களை அழைத்ததால் சிரிப்பலை எழுந்தது.

You'r reading நான் அடித்தால் நாக் அவுட் தான் தினகரனை எச்சரித்த அமைச்சர்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை