சிறிது வித்தியாசமாக காலை டிபனை சமைக்கலாமா?? ஆரோக்கியமான காய்கறி ஊத்தாப்பம் செய்வது எப்படி??

by Logeswari, Dec 29, 2020, 18:46 PM IST

காலையில் எப்பொழுதும் பொங்கல், இட்லி, தோசை என்று அரைச்ச மாவையே திரும்பி திரும்பி அரைக்கிறீர்களா?? கவலை வேண்டாம்... சுவையும், சத்தும் கலந்த ஒரே உணவு காய்கறி ஊத்தாப்பம். அந்த காலத்தில் பாட்டி செய்யும் ஊத்தாப்பத்தின் சுவையை தனி. அதை அடிச்சிக்க ஆளே கிடையாது. அந்த ஊத்தாப்பத்தை வெச்சி தான் இன்றைய காலத்தில் பீட்சா என்ற ஒரு உணவை கண்டுபிடித்து இருக்கிறார்கள். சரி வாங்க சுவையான காய்கறி ஊத்தாப்பம் செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
தோசை மாவு - தேவையான அளவு
வெங்காயம் - 2 ஸ்பூன்
குடைமிளகாய் - 2 ஸ்பூன்
தக்காளி - 1 ஸ்பூன்
கேரட் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - 1 ஸ்பூன்

செய்முறை:-
முதலில் காய்கறிகளை சிறிது துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய பின் அனைத்து காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சுற்றி எண்ணெய்யை விட்டு கொள்ளவும். பிறகு ஒரு கரண்டி மாவு எடுத்து காய்ந்த தோசைக்கல்லில் ஊற்றி அதில் நறுக்கிய காய்கறிகளை தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்.

ஒரு பக்கம் வெந்தவுடன் தோசையை திருப்பி போடவும். தோசை பொன்னிறமாக மாறியவுடன் எடுத்து விடவும். சுவையான, சத்தான காய்கறி ஊத்தாப்பம் தயார். இதை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அப்படி இருக்கும். மிஸ் பண்ணாதீங்க உடனே செய்து சாப்பிடுங்கள்.

You'r reading சிறிது வித்தியாசமாக காலை டிபனை சமைக்கலாமா?? ஆரோக்கியமான காய்கறி ஊத்தாப்பம் செய்வது எப்படி?? Originally posted on The Subeditor Tamil

More Samayal recipes News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை