சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
கோவைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் மிகவும் நல்லது. இன்று கோவைக்காயை வைத்து சூப்பரான மசாலாபாத் செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி – ஒரு கப்
கோவைக்காய் – 200 கிராம்
கரம் மசாலாத்தூள் – ஒரு ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கடுகு – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
வறுத்த முந்திரி – சிறிதளவு
எண்ணெய், நெய் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
கோவைக்காயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் கோவைக்காய், தேங்காய்த் துருவல், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு அதில் ஊறவைத்த அரிசி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும். விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.
You'r reading சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்.. Originally posted on The Subeditor Tamil
More Samayal recipes News