மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பத்தால் அஞ்சலி
புவனேஸ்வர்: மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் செய்து அஞ்சலி செலுத்தினார்.
நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நலமாக இருந்த பெண்ணுக்கு இப்படி ஒரு கொடுமை நேர்ந்துவிட்டதே என திரைப்பட பிரபலங்கள், அரசியர் தலைவர்கள் வருந்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக் புரி கடற்கரையில் ஸ்ரீதேவியின் மரணத்தை மக்கள் மத்தியில் பதிய வைக்கும் வகையில் மணல் சிற்பம் அமைத்து இரங்கல் தெரிவித்தார்.
இந்த சிற்பத்துக்கு அப்பகுதி மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
You'r reading மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பத்தால் அஞ்சலி Originally posted on The Subeditor Tamil
More Special article News