“இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவைச் சந்திக்கவும் தயார்”- புவனேஷ்குமார் சவால்!

by Rahini A, Feb 26, 2018, 11:18 AM IST

“இந்த ஆண்டின் இறுதியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரானப் போட்டியிலும் சிறப்பாக ஆடுவோம்” என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் புவனேஷ்குமார்.

இந்தியக் கிரிக்கெட் அணி சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டித் தொடர்களில் பங்கேற்றது. டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தபோதும் அடுத்தடுத்து நடந்த ஒரு நாள் மற்றும் டி20 போட்டித் தொடர்களில் சாதனை வெற்றியைப் பதிவு செய்தது.

ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அபாரமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். குறிப்பாக புவனேஷ்குமார், சஹால், யாதவ் போன்ற இளம் வீரர்கள் தங்களது அதிரடி பந்துவீச்சால் தென்னாப்பிரிக்கா அணியை சிதறடித்தனர்.

இந்நிலையில் அணியின் வெற்றி குறித்தும் எதிர்காலம் குறித்தும் புவனேஷ்குமார் கூறுகையில், “தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் வெற்றிகரமாகவே முடிந்தது. ஒரு நாள் போட்டி மற்றும் டி20 தொடரில் வெற்றி பெற்றிருந்தாலும் டெஸ்ட் போட்டியே மனதுக்கு நெருக்கமாகவே இருந்தது.

தென்னாப்பிரிக்காத் தொடர்கள் எங்கள் அனிக்கு நிறைய தன்னம்பிக்கையை அளித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டின் இறுதியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரானப் போட்டிகளிலும் கலக்குவோம்” எனக் கூறினார்.

You'r reading “இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவைச் சந்திக்கவும் தயார்”- புவனேஷ்குமார் சவால்! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை