நீட் தேர்வு கருணை மதிப்பெண்: உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிப்பெற்றால் மட்டுமே படிக்க முடியும் என்ற சூழல் ஆகிவிட்டது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் என்கிற நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. தமிழகம் பொருத்தவரையில் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் வினாத்தாளில் 49 வினாக்கள் பிழையாக இருந்தது.

இதனால், அந்த கேள்விகளுக்கு சுமார் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரித்த நீதிமன்றம், தமிழில தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண் வழங்கும்படி சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டது.

மேலும், இந்த மதிப்பெண்களை கருத்தில் எடுத்துக் கொண்டு புதிய தரவரிசைப் பட்டியலையும் வெளியிட்டு மருத்துவக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கும்படி உத்தரவிட்ட உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
world-earth-day
51வது பூமி தினம் இன்று - மனிதர்களுக்கு மட்டுமானதா பூவுலகு?
Tag Clouds