தமிழ்(அ)ப்பாவுக்கு ஓர் இரங்கற்பா !

Aug 10, 2018, 18:49 PM IST
தமிழ்(அ)ப்பாவுக்கு ஓர் இரங்கற்பா !
---------------------------------------------
யாரும் அறியா அஞ்சுக‌த்துக்கு
மகனாய்ப் பிறந்து  ! !
 
பாரே அறியும் மகத்தான
தலைவனாய் உயர்ந்து ! !
 
மன்னவர் பலரை கண்ட 
சாம்ராஜ்யங்கள் முன்னே ! !
 
சாம்ராஜ்யங்கள் பல கண்ட 
ஒரே மன்னவன் நீர் தானே ! !
 
உலகத்துக்கு ஒரே இமயம் 
எத்துனை உள்ளங்களில் நீர் இமயம் ! !
 
வ‌ச‌ன‌த்தால் வ‌சிய‌ம் செய்தாய்
வசை பாடியோரும் உன்வசம் செய்தாய் ! !
 
ஆண்டவன் இல்லையென்று  
நாத்திகம் பேசினீரே அன்று ! !
 
பல உள்ளங்களை ஆண்டவனாய்
மாண்டு போனீரே  இன்று ! !
 
வெடி போல் வரும் விமர்சனங்கள் உன்
பொடி வைத்த பேச்சில் பொசுங்கிடுமே ! !
 
சிலப்பதிகாரத்தை எளிமையாய் சொன்ன
எழுத்துச்சிற்பியே
 
சிம்மக்குரலுக்கு எழுத்தால் சிகரம்தந்த
சிந்தனைச்சிற்பியே ! !
 
காற்றோடு கரைந்திட கற்பூரமா உன்புகழ்
காலம் கடந்த காவியமன்றோ உன்புகழ் ! !
 
நீர் தலைநிமிர்ந்து ஏற்றிய மூவர்ணக்கொடி
உமக்கு தலைகுனிந்து புகழ் பரப்புதே ! !
 
செப்புமொழி ஆயிரமாயினும் தமிழை 
செம்மொழியாக்கி ஆட்சி கொண்டாய் ! !
 
வெறும் மையால் இலக்கணம் பிறக்குமா ?.
நீ இல்லா வெறுமையில் இனி தமிழகம் தழைக்குமா?
 
மெரினா உன் விலாசமல்ல இனி 
மெரினாவுக்கே நீர் தான் விலாசம் ! !
 
- சு.சரவணக்குமார்

You'r reading தமிழ்(அ)ப்பாவுக்கு ஓர் இரங்கற்பா ! Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை