சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சியில் அசைவப் பிரியர்கள்

சென்னை உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பிரியாணிகளில் நாய் கறி சேர்க்கப்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக, சென்னை எழும்பூர் ரயில் நிலைய போலீசார் 1000 கிலோ நாய்க்கறியை பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரியாணி என்றாலே நாவூறும் நம் அசைவ பிரியர்களுக்கு.. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணியில் ஆரம்பித்து தற்போது பல வகை பிரியாணிகள் நமக்கு கிடைக்கின்றன.

அப்படிப்பட்ட பிரியாணிகளில் நாய் கறி சேர்க்கப்படுவதும், அதுவும் சென்னையில் பிரபல உணவகங்களில் இதுபோன்ற பிரியாணிகள் சமைப்பதும் அசைவ பிரியர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரும்பாலும் பிரியாணிகளில் சிக்கன், மட்டன் தான் பிரபலம். கோழிக்கறிக்கு பதிலாக காக்கை கறி சேர்க்கப்பட்ட கதைகளும் உண்டு. ஆனாலும், கோழிக்கறி அல்லது ஆட்டுக்கறி தான் பிரியாணியில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதில் என்ன நிச்சயம் ?

இதற்கு சான்றாகவே, நாய்கறி பறிமுதல் சம்பவம் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலைய போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர நகரில் இருந்து ஐஸ் பெட்டிகளில் வைத்து அனுப்பப்பட்ட நாய்க்கறியை பெற்றுக்கொள்ளும் நபரின் முகவரியை கண்டுபிடித்துள்ள சென்னை நகர போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன்மூலம், எந்தெந்த பிரியாணி கடைகளில் நாய்க்கறி பிரியாணி சமைத்து பரிமாறப்படுகிறது போன்ற விவரங்கள் தெரியவரும் என்று கருதப்படுகிறது.
மேலும், இன்று பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரம் கிலோ நாய்க்கறியை புதைத்து அழிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பிரியாணியை விரும்பி சாப்பிடும் அசைவ பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
world-earth-day
51வது பூமி தினம் இன்று - மனிதர்களுக்கு மட்டுமானதா பூவுலகு?
Tag Clouds