மீண்டும் தோனி: மகிழ்ச்சியில் பும்ரா!

by Isaivaani, Feb 1, 2018, 18:59 PM IST

ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்னர் தல தோனி மீண்டும் தன் அணியினருடன் இணைந்துள்ளார். இதையடுத்து இந்திய பந்துவீச்சாளர் பும்ரா வெளியிட்டுள்ள ஒரு ட்விட், இந்திய அணியினர் ’தல’ தோனியை எந்தளவு மிஸ் செய்துள்ளனர் என வெளிப்பட்டுள்ளது.

வெற்றி பெற்றால் மகிழ்ச்சி,  தோற்றால் வருத்தம் அடைவது என  சாதாரண மனிதனின் இயல்புகள் இன்றி தன்னை எந்த சூழலிலும் ’கேப்டன் கூல்’ ஆக வைத்திருப்பவர் இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த விக்கெட்கீப்பர் மஹேந்திரசிங் தோனி.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றதை அடுத்து சிறிது காலம் தன் அணியினரைவிட்டுப் பிரிந்திருந்தார். தற்போது மீண்டும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் வருவதை அடுத்து இன்று தன் அணியினருடன் இணைந்து வலை பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்தப் பயிற்சி ஆட்டத்தின் போது கேப்டன் கோலி உள்ளிட்ட இந்திய அணியினர் மிகுந்த உற்சாகத்துடன் வலம் வந்தனர். எங்கள் ‘தல’ உடன் இணைந்து விளையாடுவதே மிகுந்த உற்சாகம்தான் எனக் கூறிவருகின்றனர் இந்திய வீரர்கள்.

இதற்கு ஒரு படி மேலே இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா தோனியுடன் இணைந்து ஒரு புகைப்படத்துடன் கூடிய ஸ்டேட்ட்சை தட்டிவிட லைக்ஸ் அள்ளுகிறது. தன் ட்விட்டர் பக்கத்தில் பும்ரா, “மீண்டும் தோனி. சிறப்பான பயிற்சி ஆட்டம்” எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

 

You'r reading மீண்டும் தோனி: மகிழ்ச்சியில் பும்ரா! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை