`இனி அதிரடிதான்..! - கர்ஜிக்கும் சுரேஷ் ரெய்னா

by Rahini A, Feb 24, 2018, 15:29 PM IST

இந்திய கிரிக்கெட் அணிக்கு வெகு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. அவரது கம்-பேக் குறித்தும் இனி வரும் காலங்களில் தான் எந்த ஸ்டைலில் பேட்டிங் செயப் போகிறார் என்பது குறித்தும் செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

இந்திய அணி கடந்த ஜனவரி மாதம் முதல் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு மிக நீண்ட தொடரை ஆடி வருகிறது. இன்றுடன் அந்தத் தொடர் முடிவுக்கு வருகிறது.

டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா வென்றிருந்தாலும் ஒருநாள் தொடரில் இந்திய அணி வென்று மாஸ் காட்டியது. தற்போது, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலை வகிக்கிறது. இன்று கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி கேப்டவுனில் நடக்கிறது.

இந்நிலையில் போட்டி குறித்தும் தனது ஆட்டம் குறித்தும் சுரேஷ் ரெய்னா, `இந்திய அணிக்கு கம்-பேக் கொடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கேப்டன் விராட் கோலி அணியை நன்றாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

என் மேலும் அவருக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. தென்னாப்பிரிக்கா தொடரைப் பொறுத்தவரையில், டெஸ்ட் போட்டியில் அவர்கள் நன்றாக விளையாடி வெற்றி பெற்றார்கள்.

ஆனால், ஒருநாள் தொடரில், சொந்த மண்ணில் அவர்களை முதன்முறையாக வீழ்த்தியுள்ளோம்’ என்றவர், தொடர்ந்து அவரது ஆட்டம் குறித்து, `இந்திய அணியில் தற்போது நிறைய பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட ஒருவரின் ஆட்டத்தை விட, அணியின் வெற்றிதான் முக்கியம். இனி ரெய்னா அதிரடிதான்.

You'r reading `இனி அதிரடிதான்..! - கர்ஜிக்கும் சுரேஷ் ரெய்னா Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை