ஐ.பி.எல் பஞ்சாப் அணிக்கு சென்னைக்கார கேப்டன்!

by Rahini A, Feb 26, 2018, 19:43 PM IST

ஐ.பி.எல் போட்டிகளில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஷ்வின் ரவிச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2018-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலம் நடந்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கில்லியாக செயல்பட்ட நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் ஐபிஎல் ஏலத்தில் 'கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்' அணிக்காத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அ, அணியின் கேப்டனாகத் தேர்வாகியுள்ளார் அஷ்வின்.

இன்று ஐபிஎல் அணியின் கேப்டன் குறித்த அறிவிப்பில் 'கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்' அணி 7.6 கோடி ரூபாய்க்கு தேர்வு செய்யப்பட்ட அஷ்வினை பத்தாவது கேப்டனாகத் தேர்ந்தெடுத்துள்ளது. பஞ்சாப் அணிக்கு இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரர் வீரேந்திர சேவாக் ஆலோசகராக உள்ளார். இந்த அணியில் சர்வதேச அளவில் முன்னணி வீரர்களாக உள்ள கிறிஸ் கெய்ல், யுவராஜ் சிங், ஆரோன் ஃபின்ச் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஐ.பி.எல் பஞ்சாப் அணிக்கு சென்னைக்கார கேப்டன்! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை