சச்சின் நிதானமாக ஆடுவார் கோலி முரட்டுத்தனமாக ஆடுகிறார் - மெக்ராத்

சச்சின் ஏதுவான பந்துகளை தீர்மானித்து ஆடுவார் விராட் கோலி அதிரடியாக தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் கிளென் மெக்ராத் கூறியுள்ளார்.

Mar 7, 2018, 13:53 PM IST

சச்சின் ஏதுவான பந்துகளை தீர்மானித்து ஆடுவார்; விராட் கோலி அதிரடியாக தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் கிளென் மெக்ராத் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு அரிய சாதனைகளை இந்திய கேப்டன் விராட் கோலி படைத்து வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட், டி20 என அனைத்து வடிவிலான கிரிக்கெட் வடிவிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், சச்சின் சாதனைகளை விராட் கோலி விரைவில் முறியடிப்பார் என மெக்ராத் கூறியுள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள மெக்ராத், “தற்போதைய சூழ்நிலையில் நான் கிரிக்கெட் விளையாடிருந்தால், கோலிக்கு கடும் நெருக்கடி கொடுக்க விரும்புகிறேன். ஆனால் காலம் தான் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. கோலிக்கு பந்துவீசும் போது ரன்கள் விளாசும் திசைகளை கண்டறிந்து, அதை தடுக்க சரியான திசையில் பந்துவீச வேண்டும்.

மிதமான வேகத்திலோ அல்லது புல்டாசாக வீசினால் பந்தை பிழிந்து விடுவார். சச்சினையும், விராட் கோலியையும் ஒப்பிட விரும்பவில்லை. கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரையில் ஒவ்வொரு வீரருக்கும் கால வேறுபாடு அதிகம் உண்டு.

சச்சின் ஏதுவான பந்துகளை தீர்மானித்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துவார். விராட் கோலி அனைத்து பந்துகளையும் எதிர்கொண்டு அதிரடி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இதுபோன்ற தொடர்ந்து ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சச்சினின் அனைத்து விதமான சாதனைகளையும் விரைவில் முறியடிப்பார் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading சச்சின் நிதானமாக ஆடுவார் கோலி முரட்டுத்தனமாக ஆடுகிறார் - மெக்ராத் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை