ரகானேவை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!

by Loganathan, Dec 17, 2020, 18:56 PM IST

இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில், ஒருநாள் தொடரியை இழந்தாலும், இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா அணியைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களைத் தனது முதல் பந்தில் இருந்தே மிரட்ட ஆரம்பித்தார் ஸ்டார்க். இவரின் மிரட்டலின் இரண்டாவது பந்தில் ப்ரித்வி ஷா அவுட்டாகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து அகர்வாலும் அவுட்டாக, இந்திய அணி 32-2 என்ற நிலையை அடைந்தது. பின்னர் புஜாராவுடன் கேப்டன் கோலி கைகோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புதிய பந்தின் துவக்கத்திற்கு முன்னர் புஜாரா (43) அவுட்டாகி வெளியேறினார்.

இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரகானே இருவரும் அணியைச் சரிவிலிருந்து மீட்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கோலியை ரன்னிற்கு அழைத்து, பின்னர் வேண்டாம் என்று ஒதுக்கியதால் மீண்டும் எல்லையை அடைய முடியாமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால் இந்திய அணியின் இமாலய கனவு சுக்குநூறானது. இன்றைய ஆட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக விளையாடி கோலியை, ரன்ரவுட் ஆக்கியதால் ரகானேவை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து தள்ளுகின்றனர். ஏனெனில் ரகானேவும் சிறிது நேரத்தில் அவுட்டாகியதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு கோலி தனது முதல் குழந்தையின் பிரசவத்திற்குச் செல்வதால், மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டியிலும் பொறுப்பு கேப்டனாக ரகானே செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 233/6 ரன்களை எடுத்துள்ளது. களத்தில் சஹா மற்றும் அஷ்வின் உள்ளனர்.

You'r reading ரகானேவை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்! Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை